Harin Fernando
செய்திகள்அரசியல்இலங்கை

நாளை கொழும்பு வருவோம் – முடிந்தால் தடுத்து பாருங்கள்! – அரசுக்கு ஹரின் சவால்

Share

“இந்த அரசின் அடக்குமுறைகள் மற்றும் ஊழல், மோசடிகளுக்கு எதிராக நாம் போராடுவோம். நாளை கொழும்பு வருவோம். முடிந்தால் தடுத்து பாருங்கள்.”

இவ்வாறு அரசுக்கு சவால் விடுத்துள்ளார் நாடாளுமன்ற உறுப்பினர் ஹரின் பெர்ணான்டோ.

எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு சவால் விடுத்தார்.

” எமது போராட்டம் நாளை முன்னெடுக்கப்படவுள்ள நிலையில், அரசுக்கு திடீரென சுகாதார நடைமுறைகள் நினைவுக்கு வந்துள்ளது. போராட்டத்தை ஒடுக்கவே இந்த முயற்சி. நாம் தயங்கமாட்டோம். அரசுக்கு எதிரான போராட்டம் நிச்சயம் நடைபெறும்.

ஜனாதிபதி தேர்தல் நடைபெற்று நாளையுடன் இரண்டு வருடங்கள் ஆகின்றன. எனவே, ஜனாதிபதியின் பயணம் தவறு என்பதையும் சுட்டிக்காட்டுவோம். பொலிஸில் சிறந்த அதிகாரிகள் உள்ளனர். எனவே, ஜனநாயக போராட்டத்துக்கு வழிவிடுவார்கள். அடக்குமுறை கட்டவிழ்த்துவிடப்பட்டாலும் அஞ்சமாட்டோம்.”- என்றார்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
army are
இலங்கை

போதைப்பொருளுடன் கைதான முன்னாள் ராணுவ சிப்பாய்.

கம்பஹா மாவட்டம், கந்தானை பிரதேசத்தில் 120 கிராம் ஐஸ் போதைப்பொருளுடன் மகரை பிரதேசத்தை சேர்ந்த 56...

body 2
இலங்கை

மூன்று பிள்ளைகளின் தந்தை மூன்று நாட்களின் பின் சடலமாக மீட்பு.

மொனராகலை மாவட்டம், படல்கும்புரை பிரதேசத்தில் வீட்டிலிருந்து வெளியே சென்ற நிலையில் காணாமல்போயிருந்த குடும்பஸ்தர் ஒருவர், மூன்று...

acdent 19
இலங்கை

இளைஞர்களின் உயிரைக்குடித்த வேகம்.

  இன்று அதிகாலை சுமார் 2.30 மணியளவில் ஹொரணை – மொரகஹஹேன வீதியில் இடம்பெற்ற விபத்தில்...

fire 19
இலங்கை

அதிகரித்துள்ள வெப்பத்திற்கு மத்தியில் இரத்மலானை குடியிருப்பு வளாகமொன்றில் தீ பரவல்.

இரத்மலானை பொருளாதார மத்திய நிலையத்துக்கு அருகிலுள்ள குடியிருப்பு வளாகமொன்றில் இன்று தீப்பரவல் ஏற்பட்டுள்ளதாக தகவல் கிடைத்ததைத்...