accident 8 750x375 1
செய்திகள்இந்தியாஇலங்கை

நாகாவதி முகாமைச் சேர்ந்த ஈழத்தமிழர் உயிரிழப்பு!

Share

தமிழ்நாடு – தருமபுரி மாவட்டம் நாகாவதி அணை முகாமைச் சேர்ந்த ஈழத்தமிழர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

குறித்த நபர், மோட்டார் வண்டியில் பயணித்தபோது எதிரே வந்த வாகனத்தை கண்டு பிரேக் போட்ட நிலையில், மோட்டார் வண்டியிலிருந்து தூக்கி வீசப்பட்டு உயிரிழந்துள்ளார்.

இவர் தலைக்கவசம் (ஹெல்மட்) அணியாமல் மோட்டார் வண்டியில் பயணித்துள்ளார் என தெரிவிக்கப்படுகிறது.

விபத்தில் உயிரிழந்தவர் இலங்கையிலிருந்து இந்தியா சென்று அகதி முகாமில் வசித்து வரும் அருண்குமார் (26) என்பவராவார்.

உயிரிழந்தவரின் சடலம் பிரேத பரிசோதனைக்கு பின் நாளை நல்லடக்கம் செய்யப்படஉள்ளது. இச் சம்பவம் நாகாவதி முகாம் மக்களை மிகுந்த சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

இவர் உணவகம் ஒன்றில் பணிபுரிந்து வந்தார் எனவும், இவருக்கு விரைவில் திருமணம் நடைபெற இருந்தது எனவும் தெரிவிக்கப்படுகிறது.

WhatsApp Image 2021 11 22 at 8.08.53 PM

#India

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
Murder Recovered Recovered Recovered 19
இலங்கைசெய்திகள்

கஹவத்தையில் கடும் பதற்றம்! பொதுமக்கள் மீது கண்ணீர் புகைத் தாக்குதல் நடத்தும் பொலிஸார்

கஹவத்தையில் பொலிஸார் மற்றும் பொதுமக்களுக்கு இடையில் ஏற்பட்ட குழப்பநிலை காரணமாக அங்கு கடும் பதற்றமான சூழல்...

Murder Recovered Recovered Recovered 17
இலங்கைசெய்திகள்

எமக்கு தொடர்பில்லை! செம்மணி அவலத்தில் இருந்து பொறுப்பு துறக்கும் அமைச்சர்

செம்மணி புதைகுழி சம்பவங்களுக்கும் தனது கட்சிக்கும் எவ்வித தொடர்பும் இல்லை என கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம்...

9
சினிமாசெய்திகள்

பிக்பாஸ் புகழ் ஷாரிக்கிற்கு குழந்தை பிறந்தது.. அவரே வெளியிட்ட குழந்தையின் வீடியோ

தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வந்தவர்கள் உமா ரியாஸ் மற்றும் ரியாஸ் கான் ஜோடி....

8
சினிமாசெய்திகள்

சிவகார்த்திகேயனுடன் மோதும் முன்னணி நடிகர்.. பிரம்மாண்டமாக ஒரே நாளில் வெளியாகும் இரண்டு படங்கள்

ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் திரைப்படம் மதராஸி. இப்படத்தில் சிவகார்த்திகேயனுடன்...