st 1
செய்திகள்அரசியல்இந்தியாஇலங்கை

இலங்கைத் தமிழர்கள் ஆதரவற்றோர் அல்ல – ஸ்டாலின் இடித்துரைப்பு

Share

தமிழர்கள் எந்த நாட்டில் வாழ்ந்தாலும் ஒரு தாய் மக்கள் தான் நாம். அனைவரும் தமிழ் இனத்தைச் சேர்ந்தவர்தான். கடல் தான் எம்மை பிரிக்கின்றது. இலங்கை தமிழர்களுக்கான நலத்திட்டங்களை மேலும் தொடர்ந்து மேற்கொள்வோம். இலங்கை தமிழர்கள் ஆதரவற்றவர் அல்ல.

இவ்வாறு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வேலூர் மாவட்ட மேல்மொணவூரில் இலங்கை தமிழர்களுக்கு 142 கோடி ரூபா செலவில் 3 ஆயிரத்து 510 வீடுகள் கட்டுவதற்கான அடிக்கல் நடும் நிகழ்வில் கலந்து கொண்டு அடிக்கல்லை நட்டு வைத்து உரையாற்றும் போதே தெரிவித்துள்ளார்.

ஒவ்வொரு முறையும் திராவிட முன்னேற்றக் கழகம் ஆட்சி பொறுப்பேற்றதும் இலங்கைத் தமிழர்களுக்கு பல்வேறு நலத் திட்டங்களை செய்து வருகின்றது.

இலங்கைத் தமிழர்களுக்கு தி.மு.க. என்றும் குரல் கொடுக்கும். கடந்த 10 ஆண்டுகளாக அ.தி.மு.க. அரசு இலங்கைத் தமிழர்களுக்காக எதையும் செய்யவில்லை.

நாம் நாம் இலங்கை தமிழர் நலவாழ்வு திட்டங்களுக்காக நிதி ஒதுக்கியுள்ளோம். மற்றும் முகாம்களில் உள்ள இலங்கைத் தமிழ் மாணவர்களின் கல்விக் கட்டணத்தை அரச ஏற்கும்.

இலங்கை தமிழர்கள் என்றுமே ஆதரவற்றவர்கள் அல்ல. தி.மு.க., அரசு இலங்கை தமிழர்களுக்கு என்றைக்கும் துணை நிற்கும். என்னை உங்களின் உடன்பிறப்பாக ஏற்றுக்கொள்ளுங்கள் என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

#srilanka #india

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
images 6 2
செய்திகள்இலங்கை

வாகன இறக்குமதி நிலையான மட்டத்தை அடைந்தது; டொலர் கையிருப்பு உயரும்: மத்திய வங்கி ஆளுநர் நம்பிக்கை!

இலங்கையில் நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் வாகன இறக்குமதி குறிப்பிடத்தக்க அளவில் நிலையான மட்டத்தை அடைந்துள்ளதாக,...

1763816381 road 6
செய்திகள்இலங்கைபிராந்தியம்

மண்சரிவு அபாயம் காரணமாக கொழும்பு-கண்டி பிரதான வீதி மீண்டும் மூடப்படுகிறது!

கொழும்பு – கண்டி பிரதான வீதி இன்று (நவம்பர் 26) இரவு 10 மணி முதல்...

MediaFile 21
செய்திகள்இலங்கை

யாழ்ப்பாணம் நாவாந்துறையில் 290 மில்லி கிராம் ஐஸ் போதைப்பொருளுடன் 5 சந்தேகநபர்கள் கைது!

யாழ்ப்பாணம் – நாவாந்துறைப் பகுதியில் நேற்றிரவு மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின்போது, ஐஸ் (Ice) போதைப்பொருளுடன் 5 சந்தேகநபர்கள்...

6.WhatsApp Image 2024 11 20 at 09.04.56
இலங்கைஅரசியல்செய்திகள்

மீனவர்களைப் பாதுகாப்போம், கடற்றொழில் துறையை நவீனமயமாக்குவோம்: அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் உறுதி!

இலங்கை மீனவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தீர்க்கப்பட்டு வருவதாகவும், அவர்களை நிச்சயம் பாதுகாப்பதாகவும் கடற்றொழில், நீரியல் மற்றும்...