இலங்கை மகளிர் கிரிக்கெட் அணி தலைவி புதிய சாதனை
இலங்கைசெய்திகள்விளையாட்டு

இலங்கை மகளிர் கிரிக்கெட் அணி தலைவி புதிய சாதனை

Share

மகளிருக்கான ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளுக்கான ஐசிசி துடுப்பாட்டத் தரவரிசையில் இலங்கை வீராங்கனை சமரி அத்தபத்து முதலிடம் பெற்றுள்ளார்.

இன்றையதினம் (04.07.2023) வெளியிடப்பட்ட புதிய தரவரிசைப் பட்டியலின்படி, இலங்கை கிரிக்கெட் அணித் தலைவி சமரி அத்தபத்து முதலிடம் பெற்றுள்ளார்.

33 வயதான சமரி அத்தபத்து ஒருநாள் சர்வதேச போட்டிகளுக்கான ஐசிசி துடுப்பாட்டத் தரவரிசையில் 758 புள்ளிகளுடன் முதலிடம் பெற்றுள்ளார்.

இதேவேளை அவுஸ்திரேலியாவின் பேத் மூனி 752 புள்ளிகளுடன் 2 ஆம் இடத்திலும் தென் ஆபிரிக்காவின் லோரா வோல்வார்ட் 732 புள்ளிகளுடன் 3 ஆம் இடத்தில் உள்ளனர்.

சனத் ஜயசூரியவுக்கு அடுத்ததாக , ஆண்கள் அல்லது மகளிர் ஒருநாள் சர்வதேச போட்டிகளின் துடுப்பாட்டத்துக்கான ஐசிசி தரவரிசையில் முதலிடம் பெற்ற ஒரே இலங்கையர் சமரி அத்தபத்து ஆவார்.

இலங்கை வீராங்கனையொருவர், ஒருநாள் சர்வதேச போட்டிகளுக்கான ஐசிசி தரவரிசையில் முதலிடம் பெற்றமை இதுவே முதல் தடவையாகும்.

இவர் நியூஸிலாந்து மகளிர் அணியுடனான ஒருநாள் சர்வதேச தொடரின் முதல் போட்டியில் ஆட்டமிழக்காமல் 108 ஓட்டங்களையும், அதேதொடரில் 3 ஆவது போட்டியில் 80 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 140 ஓட்டங்களைக் குவித்துள்ளார்.

மொத்தமாக 3 போட்டிகளிலும் இவர் 248 ஓட்டங்களைக் குவித்ததன் மூலமே இந்த சாதனையை தனதாக்கியுள்ளார்.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
images 3 5
செய்திகள்உலகம்

இந்தோனேஷியாவில் கோர மண்சரிவு: 7 பேர் பலி! 82 பேரைக் காணவில்லை – மீட்புப் பணிகள் தீவிரம்!

இந்தோனேஷியாவின் மேற்கு ஜாவா மாகாணத்தில் ஏற்பட்ட பாரிய மண்சரிவில் சிக்கி 7 பேர் உயிரிழந்துள்ளதோடு, மேலும்...

25284407 tn46
உலகம்செய்திகள்

அமெரிக்காவை உறைய வைக்கும் பெர்ன் பனிப்புயல்: 10,000 விமானங்கள் இரத்து – 18 மாநிலங்களில் அவசரநிலை!

அமெரிக்காவின் பெரும் பகுதியைத் தாக்கி வரும் ‘பெர்ன்’ (Winter Storm Fern) எனப்படும் மிக சக்திவாய்ந்த...

articles2FWeZuOSJYmiw4RXxNRts3
செய்திகள்இலங்கை

2026 அரச வெசாக் நிகழ்வு மே 30-இல்: மகாநாயக்க தேரர்களின் இணக்கத்துடன் தீர்மானம்!

2026-ஆம் ஆண்டுக்கான உத்தியோகபூர்வ அரச வெசாக் (State Vesak Festival) நிகழ்வை மே மாதம் 30-ஆம்...

MediaFile 2 5
செய்திகள்இலங்கை

இந்தியாவிலிருந்து நாடு கடத்தப்பட்ட பாதாள உலகக் குற்றவாளி! கட்டுநாயக்கவில் வைத்து சிஐடியினரால் கைது!

சர்வதேச பொலிஸாரினால் (Interpol) சிவப்பு எச்சரிக்கை (Red Notice) விடுக்கப்பட்டிருந்த நிலையில், இந்தியாவிற்குத் தப்பிச் சென்று...