Sania Mirza
விளையாட்டுசெய்திகள்

சானியாவின் அறிவிப்பு: மனமுடைந்த ரசிகர்கள்!!

Share

இந்தியாவின் நட்சத்திர டென்னிஸ் வீராங்கனையான சானியா மிர்சா தான் ஓய்வு பெறப்போவதாக அறிவித்துள்ளார்.

அவுஸ்திரேலியன் ஒபன் டென்னிஸ் போட்டியின் மகளிர் இரட்டையர் முதல் சுற்றில் கலந்துகொண்டார் சானியா மிர்சா, பெண்கள் இரட்டையர் பிரிவில் நடந்த அரை இறுதி ஆட்டத்தில் இந்தியாவின் சானியா மிர்சா – உக்ரைனின் நாடியா கிச்னோக் இணை அவுஸ்திரேலியாவின் ஆஷ்லி பார்ட்டி – ஸ்டோர்ம் சான்டெர்ஸ் ஜோடியுடன் மோதியது.

இதில் சானியா மிர்சா ஜோடி தோல்வியைத் தழுவியது. இதனையடுத்து சானியா மிர்சா டென்னிசில் இருந்து ஓய்வு பெறுவதாக இன்று (19) அறிவிப்பு வெளியிட்டு உள்ளார்.

இதுகுறித்து கருத்துத் தெரிவித்துள்ள அவர்,

இனி நான் விளையாடப்போவதில்லை. இதற்கு சில காரணங்கள் இருக்கிறது. காயத்திலிருந்து முன்பைப்போல் மீண்டு வர எனது உடல் ஒத்துழைக்கவில்லை. எனது உடல் அதன் வலுவை இழக்க தொடங்கியிருக்கிறது.

நான் எங்கு சென்றாலும் எனது 03 வயது மகனை அழைத்து செல்லவேண்டியுள்ளது. மகனின் ஆரோக்கியத்தை அபாயத்திற்குள்ளாக்குகிறேன். எனது உடல் எடையைக் குறைத்து, இளம் தலைமுறை தாய்மார்களுக்கு முன்மாதிரியாக திகழ்வேன் என்று தெரிவித்துள்ளார்.

இதேவேளை, கடந்த 2003 ஆம் ஆண்டு முதல் இந்தியாவிற்காக விளையாடி வரும் சானியா மிர்சா, இதுவரை 6 கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை வென்றுள்ளார்.

மேலும் 14 ஆவது அவுஸ்திரேலியன் ஓபன் டென்னிஸ் போட்டிகளில் பங்கேற்றிருக்கும் சானியா மிர்சா 19 வருடங்களாக விளையாடி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

#SportsNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
world
செய்திகள்இந்தியா

சீமான் பின்னடைவு: தமிழக வெற்றிக் கழக வேட்பாளர் பிரபு முன்னிலை!

தமிழக சட்டசபைத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், சிவகங்கை மாவட்டம் காரைக்குடி...

Untitled 5
செய்திகள்இலங்கை

ஏர்பஸ் ஊழல் விசாரணை: முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவுக்கு அழைப்பாணை விடுக்கப்படவில்லை என ஊடகப் பேச்சாளர் விளக்கம்!

சர்ச்சைக்குரிய ஏர்பஸ் விமானக் கொள்முதல் ஊழல் தொடர்பில் வாக்குமூலம் வழங்குவதற்காக, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ...

Untitled 4
செய்திகள்இலங்கைபிராந்தியம்

அஸ்வெசும பயனாளிகளில் 77 சதவீதமானோர் வலுவூட்டல் திட்டத்தில் இணைப்பு: சமுர்த்தி திணைக்களம் தகவல்!

நாட்டில் உள்ள ‘அஸ்வெசும’ நலன்புரித் திட்டத்தின் பயனாளிகளில் சுமார் 77 சதவீதமானோர், அவர்களைப் பொருளாதார ரீதியாக...

Untitled 3
செய்திகள்இலங்கைபிராந்தியம்

எரிபொருள் தட்டுப்பாட்டைப் போக்க வந்தடைந்த இரு கப்பல்கள்: தடையின்றி விநியோகம் செய்ய உறுதி!

நாட்டின் எரிபொருள் தேவையைத் தடையின்றிப் பூர்த்தி செய்யும் வகையில், பெட்ரோல் மற்றும் டீசல் அடங்கிய இரண்டு...