Sania Mirza
விளையாட்டுசெய்திகள்

சானியாவின் அறிவிப்பு: மனமுடைந்த ரசிகர்கள்!!

Share

இந்தியாவின் நட்சத்திர டென்னிஸ் வீராங்கனையான சானியா மிர்சா தான் ஓய்வு பெறப்போவதாக அறிவித்துள்ளார்.

அவுஸ்திரேலியன் ஒபன் டென்னிஸ் போட்டியின் மகளிர் இரட்டையர் முதல் சுற்றில் கலந்துகொண்டார் சானியா மிர்சா, பெண்கள் இரட்டையர் பிரிவில் நடந்த அரை இறுதி ஆட்டத்தில் இந்தியாவின் சானியா மிர்சா – உக்ரைனின் நாடியா கிச்னோக் இணை அவுஸ்திரேலியாவின் ஆஷ்லி பார்ட்டி – ஸ்டோர்ம் சான்டெர்ஸ் ஜோடியுடன் மோதியது.

இதில் சானியா மிர்சா ஜோடி தோல்வியைத் தழுவியது. இதனையடுத்து சானியா மிர்சா டென்னிசில் இருந்து ஓய்வு பெறுவதாக இன்று (19) அறிவிப்பு வெளியிட்டு உள்ளார்.

இதுகுறித்து கருத்துத் தெரிவித்துள்ள அவர்,

இனி நான் விளையாடப்போவதில்லை. இதற்கு சில காரணங்கள் இருக்கிறது. காயத்திலிருந்து முன்பைப்போல் மீண்டு வர எனது உடல் ஒத்துழைக்கவில்லை. எனது உடல் அதன் வலுவை இழக்க தொடங்கியிருக்கிறது.

நான் எங்கு சென்றாலும் எனது 03 வயது மகனை அழைத்து செல்லவேண்டியுள்ளது. மகனின் ஆரோக்கியத்தை அபாயத்திற்குள்ளாக்குகிறேன். எனது உடல் எடையைக் குறைத்து, இளம் தலைமுறை தாய்மார்களுக்கு முன்மாதிரியாக திகழ்வேன் என்று தெரிவித்துள்ளார்.

இதேவேளை, கடந்த 2003 ஆம் ஆண்டு முதல் இந்தியாவிற்காக விளையாடி வரும் சானியா மிர்சா, இதுவரை 6 கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை வென்றுள்ளார்.

மேலும் 14 ஆவது அவுஸ்திரேலியன் ஓபன் டென்னிஸ் போட்டிகளில் பங்கேற்றிருக்கும் சானியா மிர்சா 19 வருடங்களாக விளையாடி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

#SportsNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

Recent Posts

தொடர்புடையது
images 2 2
செய்திகள்உலகம்

சீனாவின் மிகவும் மேம்பட்ட விமானம் தாங்கிக் கப்பல் ‘ஃபுஜியன்’ சேவையில் இணைப்பு: கடற்படை மேலாதிக்கத்தில் அமெரிக்காவுக்குப் போட்டி!

சீனாவின் மிகவும் திறமையான மற்றும் மேம்பட்ட விமானம் தாங்கிக் கப்பலான ஃபுஜியன் (Fujian) இன்று (நவம்பர்...

24 6714e92d5188d
செய்திகள்அரசியல்இலங்கை

என்னை ஹிட்லர் என்கிறார்கள், பாவம்: குற்றங்களைக் கட்டுப்படுத்துவது குறித்து எழுந்த விமர்சனங்களுக்கு ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க பதிலடி!

நாட்டில் இடம்பெற்று வரும் குற்றங்களைக் கட்டுப்படுத்துவற்கு நடவடிக்கை எடுக்கும் போது தன்னைச் சிலர் ‘ஹிட்லர்’ என...

images 1 2
இலங்கைசெய்திகள்

யாழ்ப்பாணத்தில் தீடீர் சோதனைகள்: கூரிய ஆயுதங்கள் மற்றும் ஹெரோயினுடன் 9 பேர் கைது!

யாழ்ப்பாணக் காவல்துறைப் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் கடந்த இரண்டு தினங்களாக நடத்தப்பட்ட திடீர் சோதனை நடவடிக்கைகளின் போது,...

MediaFile 8
இலங்கைசெய்திகள்

போதைப்பொருள் ஒழிப்புக்கு ரூ. 2000 மில்லியன் ஒதுக்கீடு! மஹாபொல மற்றும் ஆசிரியர் மாணவர் கொடுப்பனவு ரூ. 2500 அதிகரிப்பு – ஜனாதிபதி அறிவிப்பு!

போதைப்பொருள் ஒழிப்பு, உயர்கல்வி மற்றும் தொழிற் பயிற்சியை மேம்படுத்துதல் ஆகிய துறைகளுக்காகப் பல முக்கிய நிதி...