Royal Challengers scaled
விளையாட்டுசெய்திகள்

IPL 2021-பஞ்சாப் கிங்ஸ் அணியை வீழ்த்தியது றோயல் சேலஞ்சர்ஸ்

Share

பஞ்சாப் கிங்ஸ் அணியை வீழ்த்தி பெங்களூர் றோயல் சேலஞ்சர்ஸ் 6 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.

இன்று இடம்பெற்ற IPL 48வது போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணியும் பெங்களூர் றோயல் சேலஞ்சர்ஸ் மோதியது.  முதலில் துடுப்பெடுத்தாடிய பஞ்சாப் அணி 164 ரன்கள் எடுத்தது.

அதில் முதல் இலக்கில் 67 ரன்கள் சேர்த்தது. ஹென்ரிக்சின்  பந்துவீச்சில் கோலி, படிக்கல், கிறிஸ்டியன் அடுத்தடுத்து வெளியேறினர்.  பின் களமிறங்கிய மேக்ஸ்வெல் அதிரடியாக விளையாடி 33 பந்துகளில் 4 சிக்சர்கள், 3 பவுண்டரிகள் உட்பட 57 ரன்கள் அடித்தார்.

பின் களம் இறங்கிய டிவில்லியர்ஸ்ம்  தன் பங்கிற்கு 2 சிக்ஸர்கள் அடித்தார்.  கடைசி ஓவரில் சிறப்பாக பந்து வீசிய சமி 3 இலக்குகளை வீழ்த்தினார்.  இதனால் 20 ஓவர் முடிவில் ஆர்சிபி அணி 7 விக்கெட் இழப்பிற்கு 164 ரன்கள் எடுத்தது.  சமி மற்றும் ஹென்ரிக்ஸ் தலா 3 இலக்குகளை வீழ்த்தினர்.

பதிலுக்கு வெற்றி இலக்கை நோக்கி துடுப்பாடிய பஞ்சாப் கிங்ஸ் அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் ராகுல் மற்றும் மயங்க் அகர்வால் சிறப்பாக விளையாடினர்.  முதல் இலக்கில் 91 ரன்கள் சேர்த்த நிலையில் கேஎல் ராகுல் 39 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார்.

சிறப்பாக விளையாடிய மயங்க் அகர்வால் 42 பந்துகளில் 57 ரன்கள்அடித்து ஆட்டமிழந்தார் .  அதன்பின் களமிறங்கிய பஞ்சாப் அணியின் வீரர்கள் ரன்கள் களமாட  தவறினர்.  இதனால் பஞ்சாப் அணி 20 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 158 ரன்கள் அடித்து தோல்வியுற்றது.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
1722752828 dds
செய்திகள்இலங்கை

சட்டவிரோதமாக இந்தியாவுக்குள் நுழைந்த இலங்கை பிரஜை இராமேஸ்வரத்தில் கைது: புழல் சிறையில் அடைப்பு!

யாழ்ப்பாணத்திலிருந்து கடல் மார்க்கமாகச் சட்டவிரோதமாகப் புறப்பட்டு, இந்தியக் கடற்கரையை அடைந்த இலங்கை பிரஜை ஒருவர், இராமேஸ்வரத்தில்...

2 nurse
இலங்கைசெய்திகள்

தாதியர் கல்லூரிகளில் ஆசிரியர் பற்றாக்குறை: 175 வெற்றிடங்களை நிரப்ப உடனடியாக ஆட்சேர்ப்பு – சுகாதார அமைச்சர் உத்தரவு!

நாட்டின் தாதியர் கல்லூரிகளில் (Nursing Colleges) தாதியர் ஆசிரியர்களின் பற்றாக்குறை காரணமாக, ஆட்சேர்ப்பு நடவடிக்கைகளைத் துரிதப்படுத்துமாறு...

MediaFile 3 1
செய்திகள்அரசியல்இலங்கை

போதைப்பொருள் உற்பத்தி வழக்கு: சம்பத் மனம்பேரிக்கு சொந்தமான பேருந்து, கார், கெப் வாகனம் பறிமுதல்!

தடுப்புக் காவல் உத்தரவின் பேரில் பொலிஸ் காவலில் வைக்கப்பட்டுள்ள சம்பத் மனம்பேரிக்கு சொந்தமானதாகக் கூறப்படும் ஒரு...

1728539417 vimalveravamnsa 2
செய்திகள்அரசியல்இலங்கை

நவம்பர் 21 எதிர்ப்புப் பேரணி: தேசிய சுதந்திர முன்னணி பங்கேற்க மறுப்பு – விமல் வீரவங்ச அறிவிப்பு!

எதிர்வரும் நவம்பர் 21ஆம் திகதி எதிர்க்கட்சிகள் முன்னெடுக்கவுள்ள எதிர்ப்புப் பேரணியில் பங்கேற்கப் போவதில்லை என தேசிய...