விளையாட்டுசெய்திகள்

பதவியை இராஜினாமா செய்தார் ரஷித் கான்!

Share
image 8ed2ad8949
Share

T20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 17 ஆம் திகதி ஐக்கிய அரபு அமீரகத்தில் ஆரம்பிக்கப்படவுள்ளது.

இந்த நிலையில், குறித்த போட்டியில் பங்கேற்கவுள்ள தமது அணி வீரர்களின் விபரத்தை ஒவ்வொரு நாடும் வெளியிட்டு வருகின்றது,

இந்நிலையில், ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் சபை, T20 உலக்கோப்பை தொடருக்கான ஆப்கானிஸ்தான் அணியை நேற்று (09) அறிவித்தது.இந்த அணிக்கு ரஷித் கான் அணித்தலைவராக நியமிக்கப்பட்டதுடன், அணியில் மாற்று வீரர்கள் இருவர் உட்பட மொத்தமாக 20 வீரர்கள் இடம்பெற்றிருந்தனர்.

T20 உலக்கோப்பை தொடருக்கான ஆப்கானிஸ்தான் அணி அறிவிக்கப்படட சில நிமிடங்களில் அணியின் தலைவர் பதவியை இராஜினாமா செய்கிறேன் என ரஷித் கான் அறிவிப்பை வெளியிட்டுள்ளார் .

அணித்தலைவர் எனும் வகையில் உலகக்கோப்பை அணி தெரிவு செய்யப்படும் போது என்னிடம் ஆலோசனை செய்திருக்க வேண்டும், ஆனால் அவ்வாறு நடக்கவில்லை. எனவே நான் அணித்தலைவர் பதவியில் இருந்து விலகுகிறேன் என அவர் அறிவித்துள்ளார்.

இதனையடுத்து ஆப்கானிஸ்தான் அணியின் புதிய தலைவராக முஹமது நபி நியமிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

Related Articles
25 1
இலங்கைசெய்திகள்

உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தலில் ஒரு கோடியே 72லட்சம் பேர் வாக்களிக்கத் தகுதி

எதிர்வரும் உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தலில் ஒரு ​கோடியே 72 லட்சத்து 96ஆயிரத்து 330 ​பேர் வாக்களிக்கத்...

24 1
இலங்கைசெய்திகள்

கட்டுநாயக்க விமான நிலையத்தில் குழப்பம் ஏற்படுத்திய பயணி கைது

கட்டுநாயக்க விமான நிலையத்தில் சுங்க அதிகாரிகளின் கடமைகளுக்கு இடையூறு விளைவித்த பயணி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்....

23 2
இலங்கைசெய்திகள்

சப்ரகமுவ பல்கலைக்கழக பகிடிவதை விவகாரம்! ​தொடர்புடைய மாணவர்கள் ஐவருக்கு மனஅழுத்தம்

சப்ரகமுவ பல்கலைக்கழக பகிடிவதை விவகாரத்தில் தொடர்புடையதாக தெரிவிக்கப்படும் ஐந்து மாணவிகள் மன அழுத்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது....

22 2
இலங்கைசெய்திகள்

வங்கி வாடிக்கையாளர்களுக்கான முக்கிய அறிவிப்பு

அனைத்து வங்கிகளும் நாளை காலை 11 மணி வரை மட்டுமே திறந்திருக்கும் என இலங்கை வங்கி...