செய்திகள்விளையாட்டு

பாகிஸ்தானை வீழ்த்தி இந்தியா திரில் வெற்றி

1781226 koli1
Share

உலகக் கிண்ண ரி20 போட்டித் தொடரின் இன்றைய போட்டியில் பாகிஸ்தான் அணியை 4 விக்கெட்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்தியா அணி வெற்றி பெற்றுள்ளது.

நாணய சுழற்சியில் இந்தியா அணி வெற்றிப் பெற்று முதலில் பந்துவீச தீர்மானித்துள்ளது.

அதனடிப்படையில் முதலில் களமிறங்கிய பாகிஸ்தான் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 8 விக்கெட்களை இழந்து 159 ஓட்டங்களை பெற்றுக் கொண்டது.

பந்துவீச்சில் இந்தியா அணி சார்ப்பில் அர்ஷ்தீப் சிங் மற்றும் ஹர்திக் பாண்டிய ஆகியோர் தலா 3 விக்கெட்களை வீழ்த்தியிருந்தனர்.

துடுப்பாட்டத்தில் பாகிஸ்தான் அணி சார்ப்பில் ஷான் மசூத் ஆட்டமிழக்காமல் 52 ஓட்டங்களையும், இப்திகார் அஹமட் 51 ஓட்டங்களையும் பெற்றுக் கொண்டிருந்தனர்.

அதனடிப்படையில் இந்தியா அணிக்கு 160 ஓட்டங்கள் வெற்றியிலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இந்தியா அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 5 விக்கெட்களை இழந்து 163 ஓட்டங்களை பெற்று போட்டியில் வெற்றி பெற்றுள்ளது.

பந்துவீச்சில் ஹரிஸ் ரவூப் 2 விக்கெட்களை வீழ்த்தியிருந்தார்.

துடுப்பாட்டத்தில் இந்திய அணி சார்ப்பில் விராட் கோலி ஆட்டமிழக்காமல் 82 ஓட்டங்களையும் ஹர்திக் பாண்டிய 40 ஓட்டங்களையும் பெற்றுக் கொண்டிருந்தனர்.

அதனடிப்படையில் இந்தியா அணி 4 விக்கெட்கள் வித்தியாசத்தில் அணி வெற்றி பெற்றுள்ளது.

#Sports

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

Related Articles
25 3
இலங்கைசெய்திகள்

உள்ளூராட்சி மன்றங்களில் ஆட்சி அமைப்பது தொடர்பில் பேச்சுவார்த்தை

உள்ளூராட்சி மன்றங்களில் ஆட்சி அமைப்பது தொடர்பில் ஜனநாயக தமிழ் தேசியக் கூட்மைப்புடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளோம் என...

22 5
இலங்கைசெய்திகள்

யாழில் ஆலயத்திற்கு அழைத்து வரப்பட்ட யானை மிரண்டதால் இருவர் காயம்

யாழ்ப்பாணத்தில் உள்ள ஆலயம் ஒன்றிற்கு தென்னிலங்கையில் இருந்து அழைத்து வரப்பட்ட யானை மிரண்டதால் இருவர் காயமடைந்த...

21 6
இலங்கைசெய்திகள்

வடக்கு – கிழக்கில் காணிகளை அபகரிக்கும் வர்த்தமானியின் உள்நோக்கம் என்ன.. சிறீதரன் தெரிவிப்பு

வடக்கு – கிழக்கு மாகாணங்களில் உள்ள 5,700 ஏக்கருக்கும் அதிகமான தமிழர்களின் பூர்வீக நிலங்களைச் சுவீகரிப்பதற்காக...

24 4
இலங்கைசெய்திகள்

கொழும்பு மாநகர சபையை கைப்பற்ற பேரம் பேசும் அரசாங்கம்! நாடாளுமன்றில் பகிரங்க குற்றச்சாட்டு

கொழும்பு மாநகர சபையின் அதிகாரத்தை பெற்றுக்கொள்ள பல உறுப்பினர்களுடன் அரசு மில்லியன் கணக்கான ரூபா பேரம்...