1781226 koli1
செய்திகள்விளையாட்டு

பாகிஸ்தானை வீழ்த்தி இந்தியா திரில் வெற்றி

Share

உலகக் கிண்ண ரி20 போட்டித் தொடரின் இன்றைய போட்டியில் பாகிஸ்தான் அணியை 4 விக்கெட்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்தியா அணி வெற்றி பெற்றுள்ளது.

நாணய சுழற்சியில் இந்தியா அணி வெற்றிப் பெற்று முதலில் பந்துவீச தீர்மானித்துள்ளது.

அதனடிப்படையில் முதலில் களமிறங்கிய பாகிஸ்தான் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 8 விக்கெட்களை இழந்து 159 ஓட்டங்களை பெற்றுக் கொண்டது.

பந்துவீச்சில் இந்தியா அணி சார்ப்பில் அர்ஷ்தீப் சிங் மற்றும் ஹர்திக் பாண்டிய ஆகியோர் தலா 3 விக்கெட்களை வீழ்த்தியிருந்தனர்.

துடுப்பாட்டத்தில் பாகிஸ்தான் அணி சார்ப்பில் ஷான் மசூத் ஆட்டமிழக்காமல் 52 ஓட்டங்களையும், இப்திகார் அஹமட் 51 ஓட்டங்களையும் பெற்றுக் கொண்டிருந்தனர்.

அதனடிப்படையில் இந்தியா அணிக்கு 160 ஓட்டங்கள் வெற்றியிலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இந்தியா அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 5 விக்கெட்களை இழந்து 163 ஓட்டங்களை பெற்று போட்டியில் வெற்றி பெற்றுள்ளது.

பந்துவீச்சில் ஹரிஸ் ரவூப் 2 விக்கெட்களை வீழ்த்தியிருந்தார்.

துடுப்பாட்டத்தில் இந்திய அணி சார்ப்பில் விராட் கோலி ஆட்டமிழக்காமல் 82 ஓட்டங்களையும் ஹர்திக் பாண்டிய 40 ஓட்டங்களையும் பெற்றுக் கொண்டிருந்தனர்.

அதனடிப்படையில் இந்தியா அணி 4 விக்கெட்கள் வித்தியாசத்தில் அணி வெற்றி பெற்றுள்ளது.

#Sports

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
20 12
செய்திகள்இந்தியா

இலங்கை – இந்திய அணிகளுக்கு இடையிலான கிரிக்கெட் தொடர்: ஆகஸ்ட் மாதம் நிவாரண நிதி திரட்டும் போட்டிகள்!

கடந்த நவம்பர் மாதம் இலங்கையைத் தாக்கிய ‘டித்வா’ (Ditwah) சூறாவளியால் ஏற்பட்ட பெரும் பாதிப்புகளிலிருந்து மீண்டு...

19 10
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இலங்கையில் தங்கத்தின் விலையில் வீழ்ச்சி: இன்றைய நிலவரம்!

இலங்கை நகை வியாபாரிகள் சங்கத்தின் தரவுகளின்படி, கடந்த சில நாட்களாக நிலவிய ஏற்ற இறக்கங்களுக்கு மத்தியில்,...

17 12
செய்திகள்உலகம்

மத்திய கிழக்கு மோதலால் உலகளவில் உயரும் விமான எரிபொருள் விலை: விமானப் பயணச்சீட்டுகளின் விலையில் நேரடி தாக்கம்!

மத்திய கிழக்கில் தற்போது நிலவும் போர்ச் சூழல் காரணமாக சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை...

16 12
உலகம்செய்திகள்

ஈராக்கில் ஆளில்லா வானூர்தி தாக்குதல்: பிரான்ஸ் இராணுவ அதிகாரி உயிரிழப்பு, ஜனாதிபதி மக்ரோன் கண்டனம்!

ஈராக்கின் எர்பில் (Erbil) பிராந்தியத்தில் அமைந்துள்ள கூட்டு இராணுவத் தளத்தின் மீது நடத்தப்பட்ட ஆளில்லா வானூர்தி...