தமிழக கிரிக்கெட் வீரர் நடராஜனுக்கு கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
ஐ.பி.எல். தொடரில் விளையாடுவதற்காக ஐக்கிய அரபு அமீரகம் சென்ற இவருக்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் கொரோனா தொற்று உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது .
கொரோனா காரணமாக நிறுத்திவைக்கப்பட்டிருந்த ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிகள் கடந்த 20 ஆம் திகதி டுபாயில் மீண்டும் தொடங்கியுள்ளன.
இந்நிலையில் இன்று (22) டெல்லி கேபிடல்ஸ் அணிக்கும் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கும் போட்டி நடைபெற இருந்தது. இந்நிலையில் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியைச் சேர்ந்த கிரிக்கெட் வீரர் நடராஜனுக்கு கொரோனாத் தொற்று உறுதியாகியுள்ளது .
இதனால் இவர் தற்போது தனிமைப்படுத்தப்பட்டுள்ளார், இவருடன் தொடர்பில் இருந்த விஜய் சங்கர் உட்பட அணி நிர்வாகிகள் 6 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
நடராஜனுக்கு கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டிருந்தாலும் போட்டி திட்டமிட்டபடி நடக்கும் எனவும் ஐபிஎல் நிர்வாகம் அறிவித்துள்ளது.
Leave a comment