1776545 ravishastri
செய்திகள்விளையாட்டு

எதுவும் நிரந்தரம் இல்லை! – கங்குலி பதவி தொடர்பில் ரவிசாஸ்திரி

Share

இந்திய அணியின் முன்னாள் கப்டன் கங்குலி இந்திய கிரிக்கெட் வாரிய தலைவர் பதவியில் இருக்கிறார். அவரது பதவி காலம் அடுத்த வாரம் முடிகிறது.

கங்குலிக்கு விருப்பம் இருந்த போதிலும் 2-வது முறையாக அவருக்கு பதவி வழங்க மறுக்கப்பட்டது. அதே நேரத்தில் ஜெய்ஷா கிரிக்கெட் வாரிய செயலாளர் பதவியில் மேலும் 3 ஆண்டு நீடிக்கிறார்.

இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் (பி.சி.சி.ஐ.) புதிய தலைவராக முன்னாள் வீரர் ரோஜர் பின்னி ஒரு மனதாக தேர்வு செய்யப்படுகிறார். கங்குலிக்கு பதிலாக ரோஜர் பின்னி பி.சி.சி.ஐ. தலைவராவது தொடர்பாக இந்திய அணியின் முன்னாள் பயிற்சியாளரும், முன்னாள் வீரருமான ரவிசாஸ்திரி கருத்து தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் கூறியதாவது:-

ரோஜர் பின்னி கிரிக்கெட் வாரிய தலைவராவதை வரவேற்கிறேன். உலக கோப்பையை வென்ற (1983) அணியில் இடம்பெற்ற சக வீரர் அந்த பொறுப்பை ஏற்க இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. அவர் கர்நாடக மாநில கிரிக்கெட் சங்க தலைவராக இருந்தார்.

ரோஜர் பின்னி பி.சி.சி.ஐ. தலைவர் பதவியை ஏற்க எல்லா தகுதியும் இருக்கிறது. அவர் ஒரு உலக கோப்பையை வென்றவர். நேர்மையான அவர் நல்ல குணாதியசங்களை பெற்றவர். மைதானத்தில் உள்ள வசதிகள் மேம்படுத்தப்பட வேண்டும். இது தொடர்பாக ரோஜர் பின்னியிடம் வலியுறுத்துவோம்.

கங்குலி 2-வது முறையாக கிரிக்கெட் வாரிய தலைவராக விரும்பினார் என்று தகவல்கள் வெளியானது. அவருக்கு போதுமான ஆதரவு இல்லை என்றும் கூறப்பட்டது. வாழ்க்கையில் எதுவும் நிரந்தரம் இல்லை. இன்றைக்கு நான் எதையாவது செய்கிறேன் என்றால் இன்னும் 3 ஆண்டுக்கு நான் அதையே செய்வேன் என்பது கிடையாது.

புதியவர்கள் வருவார்கள், பொறுப்பேற்பார்கள். இதுவும் ஒரு விதத்தில் ஆரோக்கியமானது. இவ்வாறு ரவிசாஸ்திரி கூறியுள்ளார்.

#sports

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

Recent Posts

தொடர்புடையது
image aa5ec14948
அரசியல்இலங்கைசெய்திகள்

ஜனாதிபதி – தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சந்திப்பு: ‘பழைய அரசியல் தீர்வு பொருத்தமற்றது, புதிய தீர்வுக்கு ஒத்துழைப்பு தேவை’

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு (TNA) விடுத்த கோரிக்கைக்கு அமைவாக, ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவிற்கும் அந்தக்...

image 8788205535
செய்திகள்இலங்கைபிராந்தியம்

திருகோணமலை சிலை அகற்றம்: ‘இது இன மோதல் அல்ல, பொலிஸாரே மோசமாக நடந்துகொண்டனர்’ – கல்யாண வன்ஸ திஸ்ஸ தேரர்!

திருகோணமலைக் கடற்கரையில் புத்தர் சிலை வைக்கப்பட்ட விடயத்திலும், பின்னர் அச்சிலை பொலிஸாரினால் அகற்றப்பட்ட விடயத்திலும் இங்கு...

Anura Kumara Dissanayake and Sajith Premadasa
அரசியல்இலங்கைசெய்திகள்

நாடகங்களை நிறுத்திவிட்டுப் பதில்களையும் தேர்தலையும் நடத்துங்கள் – சஜித் பிரேமதாச ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவிடம் கோரிக்கை!

போதைப்பொருள் வர்த்தகத்தில் ஈடுபட்டுள்ள ஊடக நிறுவனங்கள் குறித்து நாடாளுமன்றத்தில் அறிக்கைகள் வெளியிடுவதற்குப் பதிலாக, அவர்களுக்கு எதிராக...

images 21
செய்திகள்அரசியல்இலங்கை

நாமல் ராஜபக்ஷவின் கல்வித் தகுதி சர்ச்சை: ‘அவதூறுகளுக்கு நுகேகொடப் பேரணியில் பதிலளிப்பேன்’ – நிராகரிப்பு!

தனது கல்வித் தகுதிகள் குறித்துப் பரவி வரும் கூற்றுக்களை இலங்கை பொதுஜன பெரமுனவின் (SLPP) தேசிய...