win scaled
விளையாட்டுசெய்திகள்

ராஜஸ்தான் ராயல்ஸ் அணி சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை வீழ்த்தியது !

Share

ராஜஸ்தான் ராயல்ஸ் அணி, சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி  வெற்றி பெற்றது.

இன்று நடைபெற்ற ஐ.பி.எல். கிரிக்கெட்டில்  47-வது லீக் ஆட்டத்தில் டோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணி எதிர்கொண்டது.
டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி கேப்டன் சஞ்சு சாம்சன் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார். இதையடுத்து சென்னை அணியின் தொடக்க வீரர்களாக ருதுராஜ் கெய்க்வாட் மற்றும் டு பிளஸ்சிஸ் களமிறங்கினர். 19 பந்துகளில் 25 ரன்கள் எடுத்திருந்த நிலையில் டு பிளஸ்சிஸ் அவுட் ஆனார். அடுத்து களமிறங்கிய ரெய்னா 3 ரன்கள் எடுத்த நிலையில் அவுட் ஆகியதுடன் அடுத்து வந்த மொயீன் அலி 21 , ராயிடு 2 ரன்னிலும்  அவுட் ஆகி வெளியேறினார்.  மறுமுனையில் தொடக்க வீரர் கெய்க்வாட் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.
இறுதியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 189 ரன்கள் குவித்தது.
60 பந்துகளில் 9 பவுண்டரிகள், 5 சிக்சர்கள் உள்பட 101 ரன்கள் குவித்த கெய்க்வாட் இறுதி வரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார். அவருக்கு உறுதுணையாக 15 பந்துகளில் 32 ரன்கள் குவித்த ஜடேஜா களத்தில் இருந்தார்.
இதனை தொடர்ந்து 190 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடினமான இலக்குடன் ராஜஸ்தான் அணியின் தொடக்க வீரர்களாக இயன் லிவிஸ் மற்றும் ஜெய்ஷ்வால் களமிறங்கினர்.
இயன் லிவிஸ் 12 பந்துகளில் 27 ரன்கள் குவித்து வெளியேறினார். ஆனால், மறுமுனையில் ஜெய்ஷ்வால் அரைசதம் விளாசினார். அவர் 21 பந்துகளில் 6 பவுண்டரிகள், 3 சிக்சர்கள் உள்பட 50 ரன்கள் குவித்து கேஎம் ஆசிப் பந்து வீச்சில் அவுட் ஆனார்.
களமிறங்கிய ஷிவம் துபே கேப்டன் சஞ்சு சாம்சனுடன் ஜோடி சேர்ந்து ஆடினார். சஞ்சு சாம்சன் 28 ரன்கள் எடுத்த நிலையில் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார். ஆனால், மறுமுனையில் அதிரடியை வெளிப்படுத்திய ஷிவம் துபே அரைசதம் விளாசினார்.
இறுதியில் 17.3 ஓவரில் 3 விக்கெட் இழப்பிற்கு 190 ரன்கள் எடுத்தது  சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் வெற்றி பெற்றது.

Share

1 Comment

மறுமொழியொன்றை இடுங்கள்

Recent Posts

தொடர்புடையது
articles2FDa64TGfTKDPmX85aOKjK
உலகம்செய்திகள்

நைஜீரியாவில் கடத்தப்பட்ட மாணவர்கள்: அவர்களை விடுவிக்கப் பாப்பரசர் லியோ உருக்கமான வேண்டுகோள்!

நைஜீரியாவில் ஆயுதக் குழுக்களால் கடத்தப்பட்ட மாணவர்களை உடனடியாக விடுவிக்குமாறு பாப்பரசர் லியோ (Pope Leo) உருக்கமான...

24 66ce10fe42b0d
செய்திகள்இலங்கை

தமிழர்களுக்கு எதிராக வன்முறையைத் தூண்டும் வகையில் பேசிய அம்பிட்டிய சுமணரத்ன தேரரை கைது செய்ய நீதிமன்றம் உத்தரவு!

‘வடக்கில் உள்ள தமிழ் மக்களை தெற்கில் உள்ள மக்களே வெட்டிக் கொல்ல வேண்டும்’ என்று பொதுவெளியில்...

25 6925a9a6dc131
அரசியல்இலங்கைசெய்திகள்

நாடாளுமன்ற பெண் ஊழியர் மீதான பாலியல் அத்துமீறல் புகார்: ஓய்வுபெற்ற நீதிபதியின் அறிக்கையில் முக்கிய முடிவு!

நாடாளுமன்ற பெண் ஊழியர் ஒருவர் மீது பாலியல் அத்துமீறல் ஏதேனும் செய்யப்பட்டுள்ளதா என்பதை விசாரித்து அறிக்கை...