நடிகர் தனுஷின் மனைவியான ஐஸ்வர்யா தனுஷ் மீண்டும் திரைப்படங்களை இயக்கவுள்ளார் என தெரிவிக்கப்படுகின்றது.
நடிகர் தனுஷ் நடிப்பில் வெளியாகிய 3 திரைப்படத்தை இயக்கியதன் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குநராக ஐஸ்வர்யா தனுஷ் அறிமுகமானார்.
அதனை தொடர்ந்து “வை ராஜா வை” என்ற திரைப்படத்தையும் அவர் இயக்கியிருந்தார்.
நீண்ட நாட்களுக்கு பின்னர் மீண்டும் லைக்கா ப்ரொடக்சன் (Lyca Production) தயாரிப்பில் திரைப்படமொன்றை இயக்கவுள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது.
ஐஸ்வர்யா தனுஷ் இயக்கி, தனுஷ் நடிப்பில் வெளியான 3 திரைப்படத்தில் இடம்பெற்ற “வை திஸ் கொலைவெறி” பாடல் சர்வதேச ரீதியில் புகழடைந்தமை குறிப்பிடத்தக்கது.
Leave a comment