BANDU
செய்திகள்இலங்கை

ஒரு பில்லியன் இழப்பீடு கோருவேன்! – பந்துல

Share

தனது பெயருக்கும் அரசியல் வாழ்க்கைக்கும் அபகீர்த்தியை ஏற்படுத்தியமைக்காக ஒரு பில்லியன் ரூபா இழப்பீடு கோருவேன்.

இவ்வாறு வர்த்தகத்துறை அமைச்சர் பந்துல குணவர்த்தன தெரிவித்துள்ளார்.

அத்துடன் வெள்ளைப்பூண்டு மோசடி தொடர்பில் தனக்கு தொடர்பு இருக்கிறது என நிரூபிக்கப்பட்டால் அரசியலில் இருந்து ஒதுங்குவதற்கும் தயார்.

வெள்ளைப்பூண்டு கொள்வனவு மற்றும் விநியோக நடவடிக்கையில் மோசடி இடம்பெற்றுள்ளது என முன்னாள் நுகர்வோர் விவசாய அதிகார சபையின் பணிப்பாளர் சபை உறுப்பினர் துஷான் குணவர்த்தன அறிக்கை வெளியிட்டுள்ளார்.

வெள்ளைப்பூண்டு மோசடி தொடர்பான குற்றச்சாட்டானது எனது அரசியல் செல்வாக்கை சரிய செய்ய மேற்கொள்ளப்படும் சூழ்ச்சி.

நான் ஊழல் மோசடியில் ஈடுபடுகின்ற அரசியல்வாதி கிடையாது. இது தொடர்பில் அரச தரப்பினர் எனக்கு தொடர்பிருக்கிறது என்பதை நிரூபித்தால் நான் நாடாளுமன்ற உறுப்பினர் பதவி மட்டுமல்லாது இலங்கை அரசியலில் இருந்தே ஒதுங்கிவிடுவேன் – என்று அமைச்சர் பந்துல குணவர்த்தன மேலும் தெரிவித்துள்ளார்.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
world 53
செய்திகள்இலங்கைபிராந்தியம்

வெல்லம்பிட்டியில் 4 கோடி ரூபா பெறுமதியான போதைப்பொருட்கள் மீட்பு: இருவர் கைது

கொழும்பு, வெல்லம்பிட்டி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவினர் (PNB) நேற்று (மே...

world 52
செய்திகள்இலங்கைபிராந்தியம்

கொழும்பில் பிடிபட்ட 74 வியட்நாமியர்களுக்கு மே 14 வரை விளக்கமறியல்: நீதிமன்றம் அதிரடி உத்தரவு

கொழும்பு, கொள்ளுப்பிட்டி பகுதியில் உள்ள உத்தராநந்த மாவத்தையில் அமைந்துள்ள குடியிருப்பு வளாகம் ஒன்றில் வைத்து, இணையவழி...

world 51
செய்திகள்இலங்கைபிராந்தியம்

ஊழலுக்கு எதிராகக் குரல் கொடுத்துப் பதவி விலகிய NPP உறுப்பினர்: ராஜினாமா கடிதம் கசிந்த விவகாரத்தில் சர்ச்சை

தேசிய மக்கள் சக்தி (NPP) கட்சியின் குருநாகல் மாநகர சபை உறுப்பினர் பி.டபிள்யூ. பிரேமச்சந்திரா, தனது...

world 50
செய்திகள்இலங்கைபிராந்தியம்

தோல் புற்றுநோய் அபாயம்: காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை அவதானம் தேவை

இலங்கையில் தோல் புற்றுநோயால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாகச் சுகாதார மேம்பாட்டுப் பணியகம் எச்சரிக்கை விடுத்துள்ளது....