fan
விளையாட்டுசெய்திகள்

வாய்விட்டுச் சிரித்த சிராஜ்!! – மைதானத்தில் நடந்த சுவாரசியம்!!

Share

வாய்விட்டுச் சிரித்த சிராஜ்!! – மைதானத்தில் நடந்த சுவாரசியம்!!

லண்டன் லோர்ட்ஸ் மைதானத்தில் தற்போது பரபரப்பாக சென்று கொண்டிருக்கும் இந்த இரண்டாவது டெஸ்ட் போட்டி ஆட்டத்தில் வீரர்களுக்கு இடையே சீண்டல் அங்கும் இங்கும் என அனல் பறக்க சென்று கொண்டிருக்கிறது.

மற்றொரு புறம் ரசிகர்கள் மட்டுமின்றி மைதானத்தில் இருந்த வீரர்களும் வாய்விட்டு சிரிக்கும்படி ஒரு நிகழ்வு மூன்றாவது நாள் போட்டியின் போது அரங்கேறியது. அந்த நிகழ்வு தற்போது வீடியோவாகவும் இணையத்தில் வைரலாகி வருகிறது.

இங்கிலாந்து அணி துடுப்பாட்டம் செய்துகொண்டிருக்கையில் இந்திய அணி உடையை அணிந்த ஒரு இங்கிலாந்து ரசிகர் மைதானத்துக்குள் நுழைந்து இந்திய வீரரை போன்றே சகஜமாக அருகிலிருந்த வீரர்களிடம் பேச முற்பட்டார். தனது ஜெர்சியில் “ஜார்வோ” என்ற அவரது பெயரை பதிவிட்டிருந்தார்.

அப்படியே இந்திய அணியின் டி-ஷர்ட்டை அச்சுஅசலாக அணிந்திருந்த அவரின் ஜெர்சியில் அதில் இந்தியனின் லோகோ, ஸ்பான்சர் என அனைத்தும் சரியாக இருந்தது. இதன் காரணமாக ஏதோ வீரர்தான் என்று அனைவரும் பார்த்துக் கொண்டிருக்கையில் அவர் ரசிகர் என்று தெரியவந்தது.

மைதான ஊழியர்கள் அவரை மைதானத்தில் இருந்து வெளியேற்ற முற்பட்டார்கள். அப்போது அந்த மைதான அதிகாரிகளிடம் அந்த ரசிகர் தனது ஜெர்சியை காண்பித்து காண்பித்து நான் ஒரு இந்தியன் பிளேயர் என்பது போல சைகை செய்தார். இதனை கண்ட இந்திய வீரரான சிராஜ் வாய்விட்டு சிரித்தார்.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
images 10 4
செய்திகள்இலங்கை

தனியார் துறை ஊழியர்களுக்கும் ஓய்வூதியம்? அரசாங்கம் புதிய திட்டம் குறித்து ஆலோசனை!

தனியார் துறை ஊழியர்களின் எதிர்கால நலனைக் கருத்திற்கொண்டு அவர்களுக்குப் புதிய ஓய்வூதியத் திட்டமொன்றை (Pension Scheme)...

sajith
செய்திகள்இலங்கை

நாடாளுமன்றத்தில் பரபரப்பு: பெண் ஊழியர் துன்புறுத்தல் அறிக்கை ஏன் மறைக்கப்படுகிறது? சஜித் பிரேமதாச கேள்வி!

நாடாளுமன்ற பெண் ஊழியர்கள் எதிர்கொண்ட பாலியல் துன்புறுத்தல்கள் தொடர்பான விசாரணை அறிக்கை, நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்படாமல்...

செய்திகள்இலங்கை

இலங்கை மின்சார சபை மறுசீரமைப்பு இறுதிக்கட்டத்தில்! ஊழியர்களின் நலன்களுக்கு முக்கியத்துவம் என அறிவிப்பு!

நாட்டின் எதிர்கால மின்சாரத் தேவைகளைப் பூர்த்தி செய்யும் நோக்கில் திட்டமிடப்பட்டுள்ள இலங்கை மின்சார சபையின் (CEB)...

96b6d210 5408 11ef b8c3 f76c0a5f70a8.jpg
செய்திகள்உலகம்

யுனுஸின் ஆட்சி சட்டவிரோதமானது! – இந்தியாவிலிருந்து ஷேக் ஹசீனா விடுத்த முதல் பகிரங்க அறிக்கை!

கடந்த 2024-ஆம் ஆண்டு பங்களாதேஷில் ஏற்பட்ட மக்கள் புரட்சியைத் தொடர்ந்து நாட்டை விட்டு வெளியேறி இந்தியாவில்...