fan
விளையாட்டுசெய்திகள்

வாய்விட்டுச் சிரித்த சிராஜ்!! – மைதானத்தில் நடந்த சுவாரசியம்!!

Share

வாய்விட்டுச் சிரித்த சிராஜ்!! – மைதானத்தில் நடந்த சுவாரசியம்!!

லண்டன் லோர்ட்ஸ் மைதானத்தில் தற்போது பரபரப்பாக சென்று கொண்டிருக்கும் இந்த இரண்டாவது டெஸ்ட் போட்டி ஆட்டத்தில் வீரர்களுக்கு இடையே சீண்டல் அங்கும் இங்கும் என அனல் பறக்க சென்று கொண்டிருக்கிறது.

மற்றொரு புறம் ரசிகர்கள் மட்டுமின்றி மைதானத்தில் இருந்த வீரர்களும் வாய்விட்டு சிரிக்கும்படி ஒரு நிகழ்வு மூன்றாவது நாள் போட்டியின் போது அரங்கேறியது. அந்த நிகழ்வு தற்போது வீடியோவாகவும் இணையத்தில் வைரலாகி வருகிறது.

இங்கிலாந்து அணி துடுப்பாட்டம் செய்துகொண்டிருக்கையில் இந்திய அணி உடையை அணிந்த ஒரு இங்கிலாந்து ரசிகர் மைதானத்துக்குள் நுழைந்து இந்திய வீரரை போன்றே சகஜமாக அருகிலிருந்த வீரர்களிடம் பேச முற்பட்டார். தனது ஜெர்சியில் “ஜார்வோ” என்ற அவரது பெயரை பதிவிட்டிருந்தார்.

அப்படியே இந்திய அணியின் டி-ஷர்ட்டை அச்சுஅசலாக அணிந்திருந்த அவரின் ஜெர்சியில் அதில் இந்தியனின் லோகோ, ஸ்பான்சர் என அனைத்தும் சரியாக இருந்தது. இதன் காரணமாக ஏதோ வீரர்தான் என்று அனைவரும் பார்த்துக் கொண்டிருக்கையில் அவர் ரசிகர் என்று தெரியவந்தது.

மைதான ஊழியர்கள் அவரை மைதானத்தில் இருந்து வெளியேற்ற முற்பட்டார்கள். அப்போது அந்த மைதான அதிகாரிகளிடம் அந்த ரசிகர் தனது ஜெர்சியை காண்பித்து காண்பித்து நான் ஒரு இந்தியன் பிளேயர் என்பது போல சைகை செய்தார். இதனை கண்ட இந்திய வீரரான சிராஜ் வாய்விட்டு சிரித்தார்.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
Untitled 77
செய்திகள்இலங்கைபிராந்தியம்

செவனகலையில் 1,000 லீற்றர் மண்ணெண்ணெய் பறிமுதல்: இருவர் கைது!

மொனராகலை மாவட்டம், செவனகல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தண்டுவ பகுதியில், எவ்வித அனுமதிப்பத்திரமுமின்றி சட்டவிரோதமான முறையில் லொறி...

Untitled 76
செய்திகள்உலகம்

ஈரானில் அமெரிக்க போர் விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டது: பரபரப்பான பின்னணி!

ஈரானின் வான்பரப்பிற்குள் அத்துமீறி நுழைந்த அமெரிக்காவின் அதிநவீன போர் விமானத்தை, தங்கள் நாட்டின் புதிய வான்...

Untitled 75
செய்திகள்இலங்கைபிராந்தியம்

அநுராதபுரத்தில் அதிரடிச் சோதனை: காலாவதியான அரிசி பறிமுதல்!

எதிர்வரும் சித்திரை புத்தாண்டுப் பண்டிகை காலத்தை முன்னிட்டு, நுகர்வோருக்குப் பாதுகாப்பான உணவுப் பொருட்கள் கிடைப்பதை உறுதி...

Untitled 74
செய்திகள்இலங்கைபிராந்தியம்

களுத்துறை பொலிஸ் கல்லூரி பட்டமளிப்பு விழா: 280 அதிகாரிகள் நியமனம்!

களுத்துறை பொலிஸ் கல்லூரியில் தங்களது அடிப்படைப் பயிற்சியை வெற்றிகரமாக நிறைவு செய்த 280 பயிலுநர் பொலிஸ்...