chi 1
செய்திகள்உலகம்

100 கோடி பேருக்கு தடுப்பூசி! – சீனா சாதனை

Share

100 கோடி பேருக்கு தடுப்பூசி! – சீனா சாதனை

உலகிலேயே மிக அதிகமாக தடுப்பூசி செலுத்திக் கொண்ட நாடு என்ற சிறப்பை சீனா பெற்றுள்ளது.

கொரோனாவைரஸ் முதன் முதலில் சீனாவில் தான் பரவியது. இது நாளடைவில் ஏனைய நாடுகளுக்கு பரவி மிகப்பெரும் பாதிப்புகளை இன்றுவரை ஏற்படுத்தி வருகிறது.

இந்த நிலையில் மூன்றுக்கும் மேற்பட்ட தடுப்பூசிகள் சீனாவில் கண்டுபிடிக்கப்பட்டன. அவற்றை பொதுமக்களுக்கு செலுத்தி வருகிறார்கள்.

அதிக மக்கள் தொகை உலகிலேயே கொண்ட நாடாக சீனா உள்ளது. சீனாவில் 140 கோடி மக்கள் உள்ளனர். சீன மக்களுக்கு தடுப்பூசி போடும் பணிகள் மிகத் தீவிரமாக நடேய்ப்பெற்று வருகின்றன.

இந்த நிலையில், நேற்றுமுன்தினம் வரை சீனாவில் 216 கோடி டோஸ் தடுப்பூசி போடப்பட்டுள்ளது. சீன மக்கள் 100 கோடி பேருக்கு முழுமையாக தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

குறிப்பாக சீனாவின் மொத்த மக்கள் தொகையில் 71 சதவீதம் பேருக்கும் முழுமையாக (2 முறை) தடுப்பூசி போடப்பட்டு உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...