Photo 5 1
செய்திகள்இலங்கை

சதொசவில் குடும்பத்துக்கு ஒரு கிலோ சீனி – வரிசையில் காத்திருக்கும் மக்கள்

Share

சதொசவில் குடும்பத்துக்கு ஒரு கிலோ சீனி – வரிசையில் காத்திருக்கும் மக்கள்

சதொசவில் விற்பனை செய்யப்படும் சீனியைப் பெற்றுக்கொள்வதற்கு நீண்ட வரிசையில் மக்கள் காத்திருக்கும் அவலம் ஏற்பட்டுள்ளது.

நாட்டில் சீனிக்கு ஏற்பட்டுள்ள தட்டுப்பாடு காரணமாக மக்கள் அதிகளவில் பாதிப்படைந்துள்ளனர்.

சதொசவில் சீனியின் விலை சடுதியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. அமைச்சர் லசந்த அழகியவன்ன வெளியிட்ட தகவலைத் தொடர்ந்து இதுவரையில் 120 ரூபாக்கு விற்பனை செய்யப்பட்ட ஒரு கிலோ சிவப்பு சீனி, தற்போது 130 ரூபாக்கு விற்பனை செய்யப்படுகின்றது.

இந்நிலையில் சதொச விற்பனை நிலையங்களில் ஒரு குடும்பத்துக்கு ஒரு கிலோ சீனி மாத்திரம் விற்பனை செய்யப்படுகிறது என தகவல்கள் வெளிவந்துள்ளன.

மக்கள் அதனை பெற்றுக்கொள்வதற்கு சதொச நிறுவனங்களுக்க முன்னால் நீண்ட வரிசையில் நிற்பதாகவும் சில சதொச நிறுவனங்களில் சீனி நிறைவடைந்தமையால் மக்கள் கொள்வனவுசெய்ய முடியாது வீடு திரும்ப நேரிட்டுள்ளது எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

 

 

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
22 3
செய்திகள்இலங்கை

அயதுல்லா அலி கமேனியின் மறைவு: கொழும்பிலுள்ள ஈரானிய தூதரகத்தில் அமைச்சர் விஜித ஹேரத் இரங்கல்!

ஈரான் உச்சத் தலைவர் அயதுல்லா அலி கமேனியின் மறைவு குறித்து இலங்கை அரசாங்கம் மற்றும் மக்களின்...

20 2
உலகம்செய்திகள்

மில்லியன் கணக்கான மக்கள் திரள்வர் என எதிர்பார்ப்பு: அயதுல்லா அலி கமேனியின் இறுதிச் சடங்கு ஒத்திவைப்பு!

அமெரிக்க மற்றும் இஸ்ரேலிய வான்வழித் தாக்குதல்களில் கொல்லப்பட்ட ஈரானின் உச்சத் தலைவர் அயதுல்லா அலி கமேனியின்...

19 1
செய்திகள்உலகம்

ஈரான் மீதான அமெரிக்க – இஸ்ரேலிய தாக்குதல்: ஐக்கிய நாடுகள் சபையின் விசாரணைக் குழு கடும் கண்டனம்!

ஈரானில் இடம்பெறும் மனித உரிமை மீறல்கள் குறித்து விசாரணை செய்து வரும் ஐக்கிய நாடுகள் சபையின்...

18 3
செய்திகள்உலகம்

ஈரான் மீதான அமெரிக்கத் தாக்குதல் சரியானது: அமெரிக்க வெளிவிவகாரக் குழுத் தலைவர் பிரையன் மாஸ்ட் அதிரடி!

அல்ஜெசீரா ஊடகத்திற்கு வழங்கிய பிரத்யேக நேர்காணலில், அமெரிக்கப் பிரதிநிதிகள் சபையின் வெளிவிவகாரக் குழுத் தலைவர் பிரையன்...