sl army
செய்திகள்இலங்கைபிராந்தியம்

அரியாலை பகுதியில் துப்பாக்கி சூடு! – ஒருவர் படுகாயம்

Share

மணல் கடத்தலில் ஈடுபட்ட குழுவினர் மீது இன்று மாலை துப்பாக்கி சூடு இடம்பெற்றுள்ளது.

குறித்த சம்பவம் இன்று மாலை யாழ்ப்பாணம் – அரியாலை – நெளுக்குளம் பகுதியில் இடம்பெற்றது என்று பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த பகுதியில் உழவு இயந்திரத்தில் மணல் கடத்தலில் ஈடுபட்ட குழுவினரை சிறப்பு அதிரடிப்படையினர் மறித்துள்ளனர். இந்த நிலையில் அவர்கள் மீது மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி சூடு சம்பவத்தில் உழவு இயந்திரத்தில் பயணித்தவர்களில் ஒருவர் படுகாயமடைந்ததுள்ளார். படுகாயமடைந்த அவர் அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

காயமடைந்தவர் அரியாலை முள்ளியைச் சேர்ந்த யசிந்தன் (வயது – 27) என தெரிவிக்கப்பட்டுள்ளது. காயமடைந்தவர் யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் பொலிஸ் காவலில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இதேவேளை, குறித்த உழவு இயந்திரம் மணல் ஏற்றிய பெட்டியுடன் பொலிஸாரினால் மீட்கப்பட்டுள்ளது.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
image 2025 12 02 093823108
இலங்கைசெய்திகள்

முல்லைத்தீவு கடற்படை வீரர்கள் விபத்து: காணாமல் போன 5 பேரில் ஒருவரின் உடலம் மீட்பு!

அதிதீவிர வானிலைக் காரணமாக முல்லைத்தீவு சாலை முகத்துவாரப் பகுதியில், மணலை அகற்றி விரிவுபடுத்தும் பணியின்போது, கடந்த...

IMG 4676
இலங்கைசெய்திகள்

லுணுவில ஹெலிகொப்டர் விபத்தில் உயிரிழந்த விமானிக்கு விடை: பட்டச் சான்றிதழ் பூதவுடலுக்கு சமர்ப்பிப்பு!

அண்மையில் லுணுவில பகுதியில் நிவாரணப் பணிக்காகச் சென்றபோது விபத்துக்குள்ளாகி உயிரிழந்த இலங்கை விமானப்படையின் விங் கமாண்டர்...

25 68663a41415fd
இலங்கைசெய்திகள்

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபயவின் பேரிடர் நிர்வாகத்தை அரசாங்கம் ஆய்வு செய்ய வேண்டும்: நாமல் ராஜபக்ச!

பேரிடர் சூழ்நிலையை நிர்வகிக்க அரசாங்க இயந்திரம் இன்னும் தயாராக இல்லை என்று சுட்டிக்காட்டிய சிறிலங்கா பொதுஜன...

MediaFile 4
இலங்கைசெய்திகள்

வட்டியில்லா மாணவர் கடன்: விண்ணப்பக் காலக்கெடு டிசம்பர் 15 வரை நீடிப்பு!

வட்டியில்லா மாணவர் கடன் திட்டத்தின் 10வது கட்டத்திற்கான விண்ணப்பக் காலக்கெடு 2025.12.15 ஆம் திகதி வரை...