rohini wijerathna
செய்திகள்அரசியல்இலங்கை

‘வரிசை’ என்பதே இன்று இலங்கையின் நாமமாக மாறியுள்ளது! – அரசை சாடுகிறார் ரோஹினி

Share

“வரிசை” என்பதே இன்று இலங்கையின் நாமமாக மாறியுள்ளது – ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினரான ரோஹினி குமாரி விஜேரத்ன குற்றஞ்சாட்டியுள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

” முன்னர் எல்லாம் ‘சிலோன் டீ’ என்பதே இலங்கையின் அடையாளமாக, நாமமாக இருந்தது. எமது நாட்டுக்கு நற்பெயரும் இருந்தது. ஆனால் நாட்டில் இன்று எதற்கெடுத்தாலும் வரிசை. உணவுப் பொருட்களை வாங்கக்கூட வரிசையில் நிற்கவேண்டியுள்ளது. இதனால் வரிசை என்பதே நாட்டின் நாமமாக மாறியுள்ளது.

அதேவேளை, பெண்கள் பற்றி இன்று பேசப்படுகின்றது. ஆனால் ஜனாதிபதியின் வீட்டுக்கு முன்னால் சென்று போராட்டம் நடத்திய ஹிருணிக்காவை இலக்கு வைத்து தாக்குதல் நடத்தப்படுகின்றது. நாட்டிலுள்ள பெண்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளை எடுத்துரைக்கவே அவர் ஜனாதிபதியின் வீட்டுக்கு சென்றார்.

நாம் 15 ஆம் திகதி கொழும்பில் வந்து போராடுவோம். கொழும்பை சுற்றிவளைப்போம். முடிந்தால் தடுத்து பாருங்கள் என ஜனாதிபதிக்கு சவால் விடுக்கின்றோம்.” – என்றார்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...