25 690c595a669be
செய்திகள்இலங்கை

பாடசாலைகளுக்கு நாளை முதல் விடுமுறை: உயர்தரப் பரீட்சை காரணமாக நவம்பர் 7 உடன் முதற்கட்டம் நிறைவு!

Share

அரசு மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகளில் 2025ஆம் ஆண்டிற்கான மூன்றாம் தவணையின் முதல் கட்டம் நாளை (நவ 07) முடிவடையும் என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. உயர்தரப் பரீட்சை நடைபெறவுள்ளதையடுத்து, நாடளாவிய ரீதியிலுள்ள சகல பாடசாலைகளுக்கும் நாளை முதல் விடுமுறை வழங்கப்படவுள்ளது.

மூன்றாம் தவணையின் இரண்டாம் கட்டம் டிசம்பர் 08, 2025 திங்கட்கிழமை மீண்டும் தொடங்கத் திட்டமிடப்பட்டுள்ளது. முஸ்லிம் பாடசாலைகளுக்கான மூன்றாம் தவணையின் இரண்டாம் கட்டம் நவம்பர் 24, 2025 திங்கட்கிழமை தொடங்கத் திட்டமிடப்பட்டுள்ளது.

கல்வி அமைச்சு வெளியிட்டுள்ள இந்த அறிவிப்பின்படி, டிசம்பர் 8ஆம் திகதி பாடசாலைகளில் கற்றல், கற்பித்தல் செயற்பாடுகள் மீள ஆரம்பமாகும்.

Share
தொடர்புடையது
Semmani Manhole
இலங்கை

எழுமாறாக தோண்டப்பட்ட குழிகளிலும் எலும்புக்கூடுகள்!

செம்மணி மனிதப் புதைகுழியில் இதுவரை முன்னெடுக்கப்பட்ட 101 நாள் அகழ்வுப் பணிகளில் மொத்தம் 515 மனித...

Namal
இலங்கை

நாங்கள் மனித நேயத்துடன் மட்டுமே செயலாற்றுவோம் – நாமல்.

மொட்டுக் கட்சியின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ச, மொட்டுக் கட்சியின் பிரசாரக் கூட்டம் ஒன்றில் உரையாற்றும்...

Court order
இலங்கை

மீண்டும் நீதிமன்றுக்கு வந்த பவானி வீதி வழக்கு – நீதிமன்று வழங்கிய தீர்ப்பு !

தையிட்டி திஸ்ஸ விகாரைக்காக ஆக்கிரமிக்கப்பட்டுள்ள பவானி வீதியை விடுவிப்பதற்குத் தடைபோடும் வகையில் பலாலி காவல்துறையினரின் சார்பில்...

Weaponsgdg
இலங்கை

கலவரத்தினை கட்டுப்படுத்த ஏற்பட்ட தாமதம் – சிறைகளில் உள்ள ஆயுத பற்றாக்குறைகள்

நாட்டில் உள்ள ஒன்பது சிறைச்சாலைகளில் பல்வேறு துப்பாக்கிகளுக்குப் பயன்படுத்தப்படும் 2,327 தோட்டாக்கள் நீண்டகாலமாகப் பயன்படுத்த முடியாத...