Rohitha Rajapaksa Image 1200x900 1 scaled
செய்திகள்இலங்கை

மாகாண சபைத் தேர்தலில் ரோஹித்த!

Share

பிரதமர் மஹிந்த ராஜபக்ஸவின் இளைய புதல்வர் ரோஹித்த ராஜபக்ஸ, எதிர்வரும் மாகாண சபைத் தேர்தலில் களமிறங்க எதிர்பார்த்துள்ளதாக கடந்த சில காலமாகவே, தகவல்கள் வெளிவந்த வண்ணம் உள்ளன.

இவ்வாறு வெளிவரும் தகவல்களை, ரோஹித்த ராஜபக்ஸ இதுவரை நிராகரிக்கவில்லை.

இந்த நிலையில், ரோஹித்த ராஜபக்ஸ, எதிர்வரும் மாகாண சபைத் தேர்தலில், வடமேல் மாகாணத்தை இலக்கு வைத்து களமிறங்கவுள்ளதாக தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளன.

வடமேல் மாகாண முதலமைச்சர் வேட்பாளராக, ரோஹித்த ராஜபக்ஸ களமிறங்க எதிர்பார்த்துள்ளதாக தெரிய வருகின்றது.

இதன் ஒரு கட்டமாகவே, ரோஹித்த ராஜபக்ஸ, குருநாகல் மாவட்டத்திற்கு அடிக்கடி விஜயம் மேற்கொண்டு, அங்குள்ள பிரச்சினைகளை தீர்த்து வருவதாகவும் கூறப்படுகின்றது.

குருநாகல் வைத்தியசாலையில் நிலவிய பிரச்சினைகளுக்கும், ரோஹித்த ராஜபக்ஸ அண்மையில் தீர்வை பெற்றுக்கொடுத்ததாகவும் கூறப்படுகின்றது.

இதேவேளை, இராஜாங்க அமைச்சர் தயாசிறி ஜயசேகரவும், வடமேல் மாகாண முதலமைச்சர் வேட்பாளராக களமிறங்க எதிர்பார்த்துள்ளார்.

பாராளுமன்ற உறுப்பினர் பதவியை இராஜினாமா செய்து, வடமேல் மாகாண முதலமைச்சர் வேட்பாளராக களமிறங்க தயாசிறி ஜயசேகர முயற்சித்து வருவதாக அண்மையில் தகவல்கள் வெளியாகியிருந்தன.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
25 1
செய்திகள்இலங்கைவிளையாட்டு

உலகக் கிண்ணத்தில் இலங்கை அணியின் தோல்வி: கிரிக்கெட்டை முழுமையாகச் சீரமைக்க வேண்டும் – நாமல் ராஜபக்ஷ!

இலங்கை கிரிக்கெட் அணியின் தற்போதைய வீழ்ச்சி குறித்து தனது ஏமாற்றத்தை வெளிப்படுத்தியுள்ள நாமல் ராஜபக்ஷ, தோல்விக்கான...

24 1
செய்திகள்இலங்கைபிராந்தியம்

யுத்த கால ஊடகவியலாளர் படுகொலைகள்: உண்மைகளைக் கண்டறிய ஜனாதிபதி ஆணைக்குழு வேண்டும் – ரவூப் ஹக்கீம்!

மூத்த ஊடகவியலாளர் பாரதி இராஜநாயகத்தின் முதலாம் ஆண்டு நினைவு நிகழ்வு மற்றும் “பாரதி ஒரு மனிதாபிமான...

23 1
செய்திகள்அரசியல்இலங்கை

அரசியல் இருப்புக்கு போராளிகள் தேவை, ஆனால் அவர்களின் தேவைகள் புறக்கணிப்பு: சிவகுரு மதிவண்ணன் குற்றச்சாட்டு!

புனித பூமி மக்கள் கட்சியின் யாழ். மாவட்ட அமைப்பாளர் சிவகுரு மதிவண்ணன் நேற்று (மார்ச் 1)...

22 1
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

அவசரகால நிலையை நீட்டிக்க அரசாங்கம் பரிசீலனை!

அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் உரையாற்றிய அமைச்சரவை பேச்சாளர் நலிந்த ஜயதிஸ்ஸ, நாடு...