Rice AdobeStock 64819529 E
செய்திகள்இலங்கை

மியன்மாரில் இருந்து அரிசி இறக்குமதி!!

Share

அரசாங்கத்திடம் இருந்து அரசாங்கத்திற்கு என்ற திட்டத்தின் கீழ்  வரையறுக்கப்பட்ட இலங்கை வர்த்தக கூட்டுதாபனம் அரிசி  இறக்குமதி செய்வதற்காக வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்த்தன அவர்களால்  சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியது.

குறித்த ஒப்பந்தம் பற்றாகுறையின்றி போதுமானளவு அரிசியை நுகர்வோருக்கு விநியோகிப்பதற்கும் , பாதுகாப்பான கொள்ளளவை பேணுவதற்கும் இயலுமான வகையில் 100000 மெற்றிக் தொன் அரிசியை இறக்குமதி செய்வதற்கு 2021 செப்டம்பர் 27 திகதி இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தில் அங்கீகாரம் வழங்கியிருந்தது.

அதற்கமைய அரசாங்கத்திடம் இருந்து அரசாங்கத்திற்கு என்ற திட்டத்தின் கீழ் இலங்கை அரசாங்கம் மற்றும் மியன்மார் அரசாங்கம் இடையில் ஏற்படுத்தப்பட்ட ஒப்பந்ததின் அடிப்படையில் 20,000 மெற்றிக் தொன் அரிசியை , ஒரு மெற்றிக்தொன் 460 அமெரிக்க டொலர் என்ற அடிப்படையில் இலங்கை வர்த்தக கூட்டுதாபனத்தின் மூலம் இறக்குமதி செய்வதற்காக யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியது.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
Untitled 5
செய்திகள்இலங்கை

ஏர்பஸ் ஊழல் விசாரணை: முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவுக்கு அழைப்பாணை விடுக்கப்படவில்லை என ஊடகப் பேச்சாளர் விளக்கம்!

சர்ச்சைக்குரிய ஏர்பஸ் விமானக் கொள்முதல் ஊழல் தொடர்பில் வாக்குமூலம் வழங்குவதற்காக, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ...

Untitled 4
செய்திகள்இலங்கைபிராந்தியம்

அஸ்வெசும பயனாளிகளில் 77 சதவீதமானோர் வலுவூட்டல் திட்டத்தில் இணைப்பு: சமுர்த்தி திணைக்களம் தகவல்!

நாட்டில் உள்ள ‘அஸ்வெசும’ நலன்புரித் திட்டத்தின் பயனாளிகளில் சுமார் 77 சதவீதமானோர், அவர்களைப் பொருளாதார ரீதியாக...

Untitled 3
செய்திகள்இலங்கைபிராந்தியம்

எரிபொருள் தட்டுப்பாட்டைப் போக்க வந்தடைந்த இரு கப்பல்கள்: தடையின்றி விநியோகம் செய்ய உறுதி!

நாட்டின் எரிபொருள் தேவையைத் தடையின்றிப் பூர்த்தி செய்யும் வகையில், பெட்ரோல் மற்றும் டீசல் அடங்கிய இரண்டு...

Untitled 2
செய்திகள்இலங்கைபிராந்தியம்

எரிபொருள் விலைகள் அதிரடி உயர்வு: இன்று நள்ளிரவு முதல் புதிய விலைகள் அமுல்!

இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் (CPC) எரிபொருள் விலைகளில் அதிரடி மாற்றங்களை அறிவித்துள்ளது. இந்த விலை அதிகரிப்பானது...