weee 626x380 1
செய்திகள்அரசியல்இலங்கை

ஓய்வுபெறும் வயதெல்லை: பரிசீலனை செய்யாவிடில் வீண் பிரச்சினை

Share

அரச ஊழியர்கள் ஓய்வுபெறும் வயதெல்லை 65 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்த முடிவு மீள் பரீசிலனை செய்யப்பட வேண்டும் என்று அரச பங்காளிக்கட்சியான இலங்கை கம்யூனிஸ் கட்சி தெரிவித்துள்ளது.

நாடாளுமன்றத்தில் இன்று நடைபெற்ற வரவு- செலவுத்திட்ட உரைமீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே நாடாளுமன்ற உறுப்பினர் வீரசுமன வீரசிங்க, இந்த யோசனையை முன்வைத்தார்.

அரச ஊழியர்கள் ஓய்வுபெறும் வயதெல்லை 65 ஆக அதிகரிக்கப்பட்டுள்ள நிலையில் அது கட்டாயமாக்கப்படக்கூடாது. 60 வயதுக்கு மேல் எப்போதும் ஓய்வுபெறலாம் என்ற ஏற்பாடு இடம்பெறவேண்டும். அவ்வாறு இல்லாவிட்டால் வீண் பிரச்சினை உருவாகும்.

அதேபோல அரச ஊழியர்களுக்கு சம்பள அதிகரிப்பு வழங்கப்படவில்லை. தற்போதைய சூழ்நிலையில் அதனை செய்வது கடினம். எனினும், கிடைக்கும் முதல் சந்தர்ப்பத்திலேயே அதனை செய்யுமாறும் கேட்டுக்கொள்கின்றேன்.”- என்றார்.

#SrilankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
army are
இலங்கை

போதைப்பொருளுடன் கைதான முன்னாள் ராணுவ சிப்பாய்.

கம்பஹா மாவட்டம், கந்தானை பிரதேசத்தில் 120 கிராம் ஐஸ் போதைப்பொருளுடன் மகரை பிரதேசத்தை சேர்ந்த 56...

body 2
இலங்கை

மூன்று பிள்ளைகளின் தந்தை மூன்று நாட்களின் பின் சடலமாக மீட்பு.

மொனராகலை மாவட்டம், படல்கும்புரை பிரதேசத்தில் வீட்டிலிருந்து வெளியே சென்ற நிலையில் காணாமல்போயிருந்த குடும்பஸ்தர் ஒருவர், மூன்று...

acdent 19
இலங்கை

இளைஞர்களின் உயிரைக்குடித்த வேகம்.

  இன்று அதிகாலை சுமார் 2.30 மணியளவில் ஹொரணை – மொரகஹஹேன வீதியில் இடம்பெற்ற விபத்தில்...

fire 19
இலங்கை

அதிகரித்துள்ள வெப்பத்திற்கு மத்தியில் இரத்மலானை குடியிருப்பு வளாகமொன்றில் தீ பரவல்.

இரத்மலானை பொருளாதார மத்திய நிலையத்துக்கு அருகிலுள்ள குடியிருப்பு வளாகமொன்றில் இன்று தீப்பரவல் ஏற்பட்டுள்ளதாக தகவல் கிடைத்ததைத்...