ag
செய்திகள்அரசியல்இலங்கை

அமைச்சர்கள் மற்றும் பிரபுகளின் பயணத்திற்காக வாடகைக்கு விமானம்! – 2000 கோடி ரூபா நிலுவையில்

Share

முன்னாள் அமைச்சர்கள் மற்றும் பிரபுகளின் பயணத்திற்காக வாடகைக்கு பெறப்பட்ட இலகுதர விமானத்துக்கு இலங்கை விமானப்படைக்கு 2000 கோடி ரூபாய்க்கு மேல் செலுத்த வேண்டியுள்ளதாக தேசிய கணக்காய்வு அலுவலகம் தெரிவித்துள்ளது.

அமைச்சகங்கள் உட்பட 10 அரசு நிறுவனங்கள் மற்றும் இரண்டு தனியார் நிறுவனங்களால் இது தொடர்பில் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

அவ்வறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

இதன்படி, 2003 – 2013 ற்கு இடைப்பட்ட காலப்பகுதியில் இலங்கை விமானப்படையிலிருந்து கொள்வனவு செய்யப்பட்ட இலகுதர விமானங்களுக்கு 6 மில்லியனுக்கும் அதிகமான தொகையும், 2013-2018ற்கு இடையில் பெறப்பட்ட விமானங்களில் மேலும் 6 மில்லியனுக்கும் அதிகமான தொகையும் செலுத்தத் தவறியுள்ளதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த தொகை இதுவரை இலங்கை விமானப்படைக்கு செலுத்தப்படவில்லை என தெரிவிக்கப்படுகிறது.

இதுதொடர்பில் விமானப்படை ஊடகப் பேச்சாளர் குரூப் கப்டன் துஷான் விஜேசிங்கவைத் தொடர்பு கொண்டபோது, 2003 மற்றும் 2013 ஆம் ஆண்டு வரையில் கொள்வனவு செய்யப்பட்ட விமானங்களுக்காக இலங்கை விமானப்படை 6 மில்லியன் ரூபாவிற்கும் அதிகமான தொகையை செலுத்தாமை தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு அமைச்சுக்கு அறிக்கை சமர்ப்பித்துள்ளதாக தெரிவித்தார்.

2013-2018 காலப்பகுதியில் இலங்கை விமானப்படையிடமிருந்து கொள்வனவு செய்யப்பட்ட விமானங்களுக்காக செலுத்த வேண்டிய மற்றுமொரு 6 மில்லியனுக்கும் அதிகமான நிலுவைத் தொகையை நிதியமைச்சிற்கு சமர்ப்பிப்பதற்கான அறிக்கை தற்போது தயாரிக்கப்பட்டு வருவதாக அவர் மேலும் தெரிவித்தார்.

பணத்தை நிதியமைச்சகம் மீட்டு விமானப்படைக்கு திருப்பி அனுப்ப வேண்டும் என அவர் தெரிவித்தார்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
18 4
செய்திகள்உலகம்

அமெரிக்காவில் ட்ரம்ப் அரசுக்கு நெருக்கடி: ₹11.9 லட்சம் கோடி வரியைத் திருப்பிச் செலுத்த நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தலைமையிலான நிர்வாகம் கடந்த ஆண்டு சர்வதேச அவசரகால பொருளாதார அதிகாரச்...

17 4
செய்திகள்இலங்கைபிராந்தியம்

மத்திய கிழக்கு மோதல்: சவுதி மற்றும் ஓமன் விமான நிலையங்களில் 131 இலங்கையர்கள் தவிப்பு!

மத்திய கிழக்கில் நிலவி வரும் தீவிர போர்ச் சூழல் மற்றும் வான்பரப்பு கட்டுப்பாடுகள் காரணமாக சவுதி...

16 4
செய்திகள்அரசியல்இலங்கை

அரசு சேவையில் 15,839 புதிய நியமனங்கள்: அமைச்சரவை அதிரடி அனுமதி!

இலங்கை அரசாங்கத்தின் அமைச்சுக்கள் மற்றும் மாகாண சபைகளில் நீண்டகாலமாக நிலவி வரும் வெற்றிடங்களை நிரப்பும் நோக்கில்,...

15 4
செய்திகள்இலங்கைபிராந்தியம்

மத்திய கிழக்கு போர்: சர்வதேச கடற்பரப்பிற்கு செல்ல வேண்டாம் – இலங்கை மீனவர்களுக்கு அவசர எச்சரிக்கை

மத்திய கிழக்கில் அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் முன்னெடுத்து வரும் ‘ஆபரேஷன் எபிக் பியூரி’ (Operation Epic...