ag
செய்திகள்அரசியல்இலங்கை

அமைச்சர்கள் மற்றும் பிரபுகளின் பயணத்திற்காக வாடகைக்கு விமானம்! – 2000 கோடி ரூபா நிலுவையில்

Share

முன்னாள் அமைச்சர்கள் மற்றும் பிரபுகளின் பயணத்திற்காக வாடகைக்கு பெறப்பட்ட இலகுதர விமானத்துக்கு இலங்கை விமானப்படைக்கு 2000 கோடி ரூபாய்க்கு மேல் செலுத்த வேண்டியுள்ளதாக தேசிய கணக்காய்வு அலுவலகம் தெரிவித்துள்ளது.

அமைச்சகங்கள் உட்பட 10 அரசு நிறுவனங்கள் மற்றும் இரண்டு தனியார் நிறுவனங்களால் இது தொடர்பில் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

அவ்வறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

இதன்படி, 2003 – 2013 ற்கு இடைப்பட்ட காலப்பகுதியில் இலங்கை விமானப்படையிலிருந்து கொள்வனவு செய்யப்பட்ட இலகுதர விமானங்களுக்கு 6 மில்லியனுக்கும் அதிகமான தொகையும், 2013-2018ற்கு இடையில் பெறப்பட்ட விமானங்களில் மேலும் 6 மில்லியனுக்கும் அதிகமான தொகையும் செலுத்தத் தவறியுள்ளதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த தொகை இதுவரை இலங்கை விமானப்படைக்கு செலுத்தப்படவில்லை என தெரிவிக்கப்படுகிறது.

இதுதொடர்பில் விமானப்படை ஊடகப் பேச்சாளர் குரூப் கப்டன் துஷான் விஜேசிங்கவைத் தொடர்பு கொண்டபோது, 2003 மற்றும் 2013 ஆம் ஆண்டு வரையில் கொள்வனவு செய்யப்பட்ட விமானங்களுக்காக இலங்கை விமானப்படை 6 மில்லியன் ரூபாவிற்கும் அதிகமான தொகையை செலுத்தாமை தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு அமைச்சுக்கு அறிக்கை சமர்ப்பித்துள்ளதாக தெரிவித்தார்.

2013-2018 காலப்பகுதியில் இலங்கை விமானப்படையிடமிருந்து கொள்வனவு செய்யப்பட்ட விமானங்களுக்காக செலுத்த வேண்டிய மற்றுமொரு 6 மில்லியனுக்கும் அதிகமான நிலுவைத் தொகையை நிதியமைச்சிற்கு சமர்ப்பிப்பதற்கான அறிக்கை தற்போது தயாரிக்கப்பட்டு வருவதாக அவர் மேலும் தெரிவித்தார்.

பணத்தை நிதியமைச்சகம் மீட்டு விமானப்படைக்கு திருப்பி அனுப்ப வேண்டும் என அவர் தெரிவித்தார்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...