Cabral
செய்திகள்இலங்கை

அத்தியாவசியமற்ற பொருட்களின் இறக்குமதி வரையறை நீக்கம்

Share

அத்தியாவசியமற்ற பொருட்களுக்கான இறக்குமதிக்கு விதிக்கப்பட்டிருந்த 100% வைப்புத் தொகை தேவைப்பாடு நேற்று முதல் நீக்கப்படுகிறது என மத்திய வங்கி அறிவித்துள்ளது.

மத்திய வங்கி ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால் இதனை தெரிவித்துள்ளார்.

பேரண்டப் பொருளாதார மற்றும் நிதியியல் முறைமை உறுதிப்பாட்டை நிச்சயப்படுத்துவதற்கான ஆறு மாதகால வழிகாட்டல்’ வெளியீட்டு நிகழ்வில் கருத்து தெரிவிக்கும் போது அவர் இதனை கூறியுள்ளார்.

போதுமான அளவு அந்நிய செலாவணி காணப்படுகிறது. எதிர்வரும் 6 மாதங்களுக்கு தேவையற்ற பொருட்களை களஞ்சியப்படுத்த வேண்டாம்.

இறக்குமதியாளர்கள் பொறுப்புடன் செயற்படுவதுடன் தேவைக்கேற்ப மட்டுமே இறக்குமதியை மேற்கொள்ளுங்கள் எனவும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

மேலும் சிறிய மற்றும் நடுத்தர வர்த்தகர்களின் கடன் வட்டிக்கான நிவாரணத்துக்கு 15 ஆயிரம் மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது.

அதன்படி எதிர்வரும் 6 மாதங்களுக்கு வாகனம் சொத்துக்கள் சுவீகரிக்க வேண்டாம் என மத்திய வங்கி ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால் கோரியுள்ளார்.

நாடு பொருளாதார நெருக்கடிக்கு முகம் கொடுத்துள்ள நிலையில் டொலருக்கு பற்றாக்குறை நிலவியதால் அத்தியாவசியமற்ற 623 பொருட்களுக்கு மத்திய வங்கியால் கடந்த செப்ரெம்பர் 09 ஆம் திகதி கடுமையான இறக்குமதி கட்டுபாடு விதிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
kalani
இலங்கை

களனி கங்கையில் சிறிய வெள்ள அபாயம்.

நீர்ப்பாசன திணைக்களம் விடுத்துள்ள அறிவித்தலின் பிரகாரம், களனி கங்கை ஆற்றுப்படுகையின் மேல் மற்றும் மத்திய நீரேந்து...

Maithripala Sirisena
இலங்கை

உச்சக்கட்ட மகிழ்ச்சியில் மைத்திரி – ஹேமசிறி பெர்னாண்டோ நீதிமன்றில் தெரிவிப்பு.

நேற்று, 2019 உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பான வழக்கில் முன்னாள் பொலிஸ் மா அதிபர் பூஜித்...

சிறைக்கு அழைத்து செல்லப்பட்ட
இலங்கை

சிறைக்கு அழைத்து செல்லப்பட்ட பூஜித் ஜயசுந்தர மற்றும் முன்னாள் ஹேமசிறி பெர்னாண்டோ.

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் நடத்தப்படவுள்ளதாக புலனாய்வு தகவல்கள் கிடைத்திருந்தபோதிலும், அதனைத் தடுப்பதற்கு நடவடிக்கை எடுக்காமை,...

Shooting 5
இலங்கை

சற்றுமுன் மிரிஸ்ஸ பகுதியில் துப்பாக்கிசூடு.

இன்றைய தினம், மிரிஸ்ஸ, சந்திப் பகுதியில் மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத இருவரால் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச்...