கோபால் பக்லே
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இந்தியத் தூதுவரால் வடக்கு மீனவர்களுக்கு நிவாரணப் பொதிகள்!

Share

இலங்கைக்கான இந்தியத் தூதுவர் கோபால் பக்லே, நாளை காலை 10 மணியளவில் யாழ்ப்பாணத்திலும், பிற்பகல் 2 மணியளவில் மன்னாரிலும் மாவட்ட செயலகங்களில் வைத்து மீனவர்களுக்கான நிவாரணப் பொதிகளை வழங்கிவைக்கவுள்ளார்.

வடக்கு மீனவர்கள எதிர்நோக்கும் நெருக்கடி நிலைமையைக் கருத்தில்கொண்டு இந்திய அரசால் 5 ஆயிரத்து 800 ரூபா பெறுமதியிலான நிவாரணப் பொதிகள் இந்தியத் தூதுவரால் வழங்கிவைக்கப்படவுள்ளன.

இந்தப் பொதிகளில் யாழ்ப்பாணம் மீனவர்களுக்கு 600 பொதிகளும், மன்னார் மீனவர்களுக்கு 200 பொதிகளும் அனுமதிக்கப்பட்டபோதும் இந்தியத் தூதுவரின முன்னிலையில் இரு மாவட்டங்களிலும் தேர்வு செய்யப்பட்ட தலா 30 மீனவர்களே அழைக்கப்பட்டுள்ளனர்.

எஞ்சியவை தொடர்பான ஏற்பாடுகளில் மன்னாரில் மேலும்70 பேர் அழைக்கப்பட்டுள்ளனர்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
Mahara Prison
இலங்கை

மஹர சிறைச்சாலையில் ஒருவர் பலி – பலர் படுகாயம்.

மஹர சிறைச்சாலையில் ஏற்பட்ட பதற்ற நிலைமையின் போது காயமடைந்தவர்களில் ஒருவர் பலியாகியுள்ளதுடன், மேலும் காயமடைந்த 6...

Featuredc
இலங்கை

மஹர சிறையில் ஏற்பட்ட மோதல் – ராகமயில் பொலிஸ் ஊரடங்கு.

ராகம பொலிஸ் எல்லைக்குள் மறு அறிவிப்பு வரும் வரை பொலிஸ் ஊரடங்கு உடனடியாக நடைமுறைபடுத்தப்பட்டுள்ளது. மஹர...

sgdh
இலங்கை

தாய்லாந்திலிருந்து இலங்கைக்கு அனுப்பப்பட்ட போதைப்பொருட்கள்.

பெங்கொக் நகரிலிருந்து கடந்த ஜூலை 24ஆம் திகதி இலங்கைக்கு வந்தடைந்த விமானமொன்றில், பரிசுப் பொருட்கள் அடங்கிய...

காட்டு யானை தாக்கியதில் ஒருவர் பலி
இலங்கை

காட்டு யானை தாக்கியதில் ஒருவர் பலி.

காட்டு யானை தாக்கியதில் தும்பகல்ல, குடாஓய பகுதியில் பதுளுவெலவை சேர்ந்த 45 வயதுடைய ஒருவர் உயிரிழந்துள்ளார்....