1637464399909 scaled
செய்திகள்உலகம்

கொரோனா நிலவரத்தை ஆவணப்படுத்திய பெண்ணை விடுதலை செய்யுங்கள்! – ஐ.நா கோரிக்கை

Share

வூஹான் கொரோனா நிலவரத்தை உலகிற்கு ஆவணப்படுத்தியதற்காக சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் பெண் பத்திரிகையாளரை விடுவிக்குமாறு சீனாவுக்கு ஐ.நா வலியுறுத்தியுள்ளது.

கடந்த மே 2020ல் சாங் சான் கைது செய்யப்பட்டார். அவருக்கு 4 ஆண்டுகள் சிறைத் தண்டனை அறிவிக்கப்பட்டது.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து சாங் சான் சிறையில் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடங்கினார். இதனால் அவரது உடல்நிலை மோசமடைந்துள்ளது. சாங் சான் உடனடியாக விடுதலை செய்யப்பட வேண்டும் மனித உரிமை ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

இந்நிலையில் பத்திரிகையாளர் சாங் சானை விடுவிக்குமாறு சீனாவுக்கு ஐக்கிய நாடுகள் அவை கோரிக்கை விடுத்துள்ளது. ‘சாங் சானின் உடல்நிலை மோசமடைந்து வருவதைப் பற்றி நாங்கள் மிகவும் கவலையடைகிறோம்’ என ஐநா தெரிவித்துள்ளது.

சீனாவின் வூஹான் நகரில் தான் கொரோனாவின் முதல் நோயாளி கண்டறியப்பட்டதாக கூறப்பட்டது. இதனால், சாங் சான் என்ற பெண் பத்திரிகையாளர் வூஹான் நகருக்கு பயணம் மேற்கொண்டு கொரோனா பரவலை சீன அரசு கையாண்ட விதம் குறித்து கேள்வி எழுப்பி வீடியோ பதிவு செய்தமை குறிப்பிடத்தக்கது.

#WorldNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
Murder Recovered Recovered 18
சினிமாசெய்திகள்

லெட்டர் எழுதி வைத்துவிட்டு வீட்டிலிருந்து வெளியேறினேன்.. விஜய் சொன்ன சுவாரசிய தகவல்

நடிகர் விஜய் தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகிறார். இவர் நடிப்பில் அடுத்ததாக...

Murder Recovered Recovered 17
சினிமாசெய்திகள்

கோமாவில் இருந்த பிரபல சீரியல் நடிகையின் தற்போதைய நிலை… இப்படி ஆகிடுச்சா?

ஐடி வேலை பார்த்து பின் விஜேவாக கேமரா முன் வந்து சீரியல் மற்றும் சினிமா நடிகையாக...

Murder Recovered Recovered 16
சினிமாசெய்திகள்

வெற்றிமாறன் படத்தில் இரட்டை வேடம்.. சிம்பு அடுத்த படத்தின் மாஸ் அப்டேட்

நடிகர் சிம்பு, தமிழ் சினிமாவில் ஏராளமான ரசிகர்கள் கூட்டம் வைத்திருக்கும் பிரபலம். இவர் நடிப்பில் சமீபத்தில்...

Murder Recovered Recovered 15
சினிமாசெய்திகள்

கட்டடத் தொழிலாளியாகவே மாறிய தனம் சீரியல் நடிகை… அவரே வெளியிட்ட BTS வீடியோ

விஜய் தொலைக்காட்சியில் கடந்த சில மாதங்களுக்கு முன் புதிய தொடராக ஒளிபரப்பாக தொடங்கிய சீரியல் தனம்....