Mervin Silva
செய்திகள்அரசியல்இலங்கை

குற்றச்சாட்டை நிரூபித்தால் தண்டனை ஏற்கத் தயார்! – மேர்வின் சில்வா

Share

” களனி தேர்தலில் நான் அரசியல் செய்தேன். ஆனால், ஊழல் – மோசடிகளில் ஈடுபடவில்லை. அவ்வாறு ஈடுபட்டேன் என எவராவது நிரூபித்தால் எந்தவொரு தண்டனையையும் ஏற்கத் தயார்.” இவ்வாறு அறிவித்துள்ளார் முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

” நான் எவரிடமும் பணம் வசூலிக்கவில்லை. கப்பம் பெறவில்லை. அரசியலில் ஈடுபட்டாலும் ஊழல்களில் ஈடுபட்டதில்லை. இது மக்களுக்கு தெரியும். நான் ஊழல் செய்துள்ளேன் என எவராவது நிரூபித்தால் எந்தவொரு தண்டனையையும் ஏற்கத் தயார்.

நான் வியாபாரி. பல வர்த்தக நடவடிக்கைகளில் ஈடுபட்டேன். அதன்மூலமே எனக்கு பணம் கிடைத்தது.

அதேவேளை, மஹிந்த ராஜபக்ச சிறந்த தலைவர். துட்டகைமுனு மன்னருக்கு பிறகு தென்பகுதியில் உருவான மிகவும் சிறந்த தலைவர். வெளிநாடுகளிடம் அடிபணியவில்லை. போரை முடித்தார். ஆனால் இந்த அரசு தற்போது பயணிக்கும் பாதையால் அத்தகையதொரு தலைவருக்கும் அவப்பெயர் ஏற்பட்டுள்ளது. நான் மஹிந்தவுடன் இன்று இருந்திருந்தால் அவரையும் அழைத்துக்கொண்டி வெளியேறியிருப்பேன்.”- என்றார்.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
world 86
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பூசா சிறையில் கொலைச் சதி? மத்திய குற்றப் புலனாய்வுப் பிரிவு விசாரணை!

பரத லக்ஷ்மன் பிரேமச்சந்திராவின் கொலை வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்டு, பூசா உயர் பாதுகாப்புச் சிறையில்...

world 85
செய்திகள்இலங்கைபிராந்தியம்

அபாயகரமான வாகன ஓட்டுநர்களைப் பிடிக்க புதிய வாட்ஸ்அப் எண்: வீடியோ ஆதாரங்களை அனுப்பக் காவல்துறை வேண்டுகோள்!

இலங்கையில் அதிகரித்து வரும் சாலை விபத்துகளைக் கட்டுப்படுத்தவும், பொறுப்பற்ற முறையில் வாகனம் ஓட்டுபவர்களுக்கு எதிராக உடனடி...

world 84
செய்திகள்உலகம்

இஸ்லாமாபாத்தில் சரித்திர முக்கியத்துவமிக்க பேச்சுவார்த்தை: ஜே.டி. வேன்ஸ் மற்றும் ஈரானியக் குழுவினரைச் சந்தித்தார் ஷெபாஸ் ஷெரீப்!

மத்திய கிழக்கில் கடந்த பெப்ரவரி 28 முதல் நீடித்து வரும் போர்ச் சூழலை முடிவுக்குக் கொண்டு...

world 83
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இலங்கைக்குக் கடந்த மார்ச் மாதத்தில் வெளிநாட்டுப் பணப்பரிமாற்றம் அதிகரிப்பு!

இலங்கை மத்திய வங்கி (CBSL) வெளியிட்டுள்ள சமீபத்திய புள்ளிவிவரங்களின்படி, கடந்த 2026 மார்ச் மாதத்தில் புலம்பெயர்...