ratmalana airpotyddd
செய்திகள்இலங்கை

மீண்டும் ரத்மலான விமான நிலையம்!

Share

கொழும்பு ரத்மலான விமான நிலையம் 5 தசாப்தங்களுக்குப் பின் மீண்டும் சர்வதேச விமான பயங்களை ஆரம்பிக்கவுள்ளது எனத் தெரிவிக்கப்படுகிறது.

அதன்படி முதல் விமானம் அடுத்த மாதம் மாலைதீவுக்குப் புறப்படும் என இலங்கை சுற்றுலாத்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.

மாலைதீவு எயார்லைன்ஸூடன் பேச்சுக்களின் பின் அவர்கள் ரத்மலானையிலிருந்து விமானங்களை மீண்டும் ஆரம்பிப்பதற்கு ஒப்புக்கொண்டுள்ளது.

இதில் ஆரம்பத்தில் 50 பயணிகளை மாத்திரம் ஏற்றிச்செல்லக்கூடிய விமானம் மாலைதீவுக்கும் கொழும்புக்கும் இடையே சேவையில் முதலில் ஈடுபடும் எனத் தெரிவிக்கப்படுகிறது.

இந்த விமான நிலையம் 1938 ஆம் ஆண்டு அமைக்கப்பட்டுள்ளது. பின் 1968 ஆம் ஆண்டு கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து விமான சேவைகள் ஆரம்பிக்கப்பட்டன.

இதனால் ரத்மலானை விமான நிலைய சேவைகள் இடைநிறுத்தப்பட்டன.

ரத்மலான விமான நிலையம் இந்தியா மற்றும் மாலைதீவை மையமாகக் கொண்ட ஒரு பிராந்திய சர்வதேச விமான நிலையாகும்.

இந்த நிலையில் ரத்மலானை விமான நிலையத்தில் விமானங்களை ஊக்குவிக்க தரிப்பிடக் கட்டணத்தை ஒரு வருடத்துக்கு நீக்கவும், பயணிகளிடம் இருந்து விதிக்கப்படும் விமான நிலைய சேவை வரியை நிறுத்தவும் அரசு நடவடிக்கை எடுத்துள்ளது எனத் தெரிவிக்கப்படுகிறது.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
world 170
செய்திகள்இலங்கைபிராந்தியம்

கடந்த கால தவறுகளில் இருந்து பாடம் கற்று முன்னோக்கிச் செல்வோம்: நாமல் ராஜபக்ச அழைப்பு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு தங்காலை, கால்டன் ஹவுஸில் இன்று (ஏப்ரல் 15) நடைபெற்ற...

world 169
செய்திகள்இலங்கைபிராந்தியம்

57.5 கிலோ இறந்த கோழி இறைச்சி மீட்பு – வர்த்தகருக்கு எதிராக வழக்கு!

மட்டக்களப்பு, களுவாஞ்சிகுடி பகுதியில் சித்திரைப் புத்தாண்டு காலப்பகுதியில் பொதுமக்களின் சுகாதாரத்தைப் பாதுகாக்கும் நோக்கில் முன்னெடுக்கப்பட்ட விசேட...

world 168
செய்திகள்உலகம்

அமெரிக்காவில் இறக்குமதியாளர்களுக்கு வரிப்பணம் மீளளிப்பு: புதிய நடைமுறை திங்கட்கிழமை ஆரம்பம்!

அமெரிக்க நிறுவனங்கள் மற்றும் இறக்குமதியாளர்களிடமிருந்து சர்வதேச அவசரகால பொருளாதார அதிகாரச் சட்டத்தின் (IEEPA) கீழ் வசூலிக்கப்பட்ட...

world 167
செய்திகள்உலகம்

ஈரான் மீதான கடற்படை முற்றுகை: டொனால்ட் ட்ரம்பிற்கு அதிகரிக்கும் சர்வதேச அழுத்தங்கள்!

ஈரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை மற்றும் ‘அதிகபட்ச அழுத்தம்’ கொடுக்கும் கொள்கையினால், அமெரிக்க ஜனாதிபதி...