ratmalana airpotyddd
செய்திகள்இலங்கை

மீண்டும் ரத்மலான விமான நிலையம்!

Share

கொழும்பு ரத்மலான விமான நிலையம் 5 தசாப்தங்களுக்குப் பின் மீண்டும் சர்வதேச விமான பயங்களை ஆரம்பிக்கவுள்ளது எனத் தெரிவிக்கப்படுகிறது.

அதன்படி முதல் விமானம் அடுத்த மாதம் மாலைதீவுக்குப் புறப்படும் என இலங்கை சுற்றுலாத்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.

மாலைதீவு எயார்லைன்ஸூடன் பேச்சுக்களின் பின் அவர்கள் ரத்மலானையிலிருந்து விமானங்களை மீண்டும் ஆரம்பிப்பதற்கு ஒப்புக்கொண்டுள்ளது.

இதில் ஆரம்பத்தில் 50 பயணிகளை மாத்திரம் ஏற்றிச்செல்லக்கூடிய விமானம் மாலைதீவுக்கும் கொழும்புக்கும் இடையே சேவையில் முதலில் ஈடுபடும் எனத் தெரிவிக்கப்படுகிறது.

இந்த விமான நிலையம் 1938 ஆம் ஆண்டு அமைக்கப்பட்டுள்ளது. பின் 1968 ஆம் ஆண்டு கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து விமான சேவைகள் ஆரம்பிக்கப்பட்டன.

இதனால் ரத்மலானை விமான நிலைய சேவைகள் இடைநிறுத்தப்பட்டன.

ரத்மலான விமான நிலையம் இந்தியா மற்றும் மாலைதீவை மையமாகக் கொண்ட ஒரு பிராந்திய சர்வதேச விமான நிலையாகும்.

இந்த நிலையில் ரத்மலானை விமான நிலையத்தில் விமானங்களை ஊக்குவிக்க தரிப்பிடக் கட்டணத்தை ஒரு வருடத்துக்கு நீக்கவும், பயணிகளிடம் இருந்து விதிக்கப்படும் விமான நிலைய சேவை வரியை நிறுத்தவும் அரசு நடவடிக்கை எடுத்துள்ளது எனத் தெரிவிக்கப்படுகிறது.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
4670422 455699102
செய்திகள்உலகம்

கிறிஸ்துமஸ் தின போர் நிறுத்தத்தை ரஷ்யா நிராகரித்தது வேதனையளிக்கிறது – பாப்பரசர் 14-வது லியோ கவலை!

உலகம் முழுவதும் நாளை (25) கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாடப்படவுள்ள நிலையில், பாப்பரசர் 14-வது லியோ விடுத்த...

images 10 3
செய்திகள்உலகம்

தாய்வானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 6.1 ஆகப் பதிவு!

தாய்வானில் இன்று சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஒன்று ஏற்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்த நிலநடுக்கம்...

images 9 3
அரசியல்இலங்கைசெய்திகள்

அம்பலாங்கொடை பொலிஸ் நிலையத்தில் துப்பாக்கி வெடித்ததில் கான்ஸ்டபிள் காயம்!

அம்பலாங்கொடை பொலிஸ் நிலையத்தில் இன்று (24) மாலை நிகழ்ந்த எதிர்பாராத துப்பாக்கிச் சூட்டு விபத்தில் பொலிஸ்...

images 9 3
செய்திகள்இலங்கை

நீர்நிலைகளில் இறங்கும்போது எச்சரிக்கை: பண்டிகைக் காலத்தில் பொதுமக்களுக்கு வைத்திய நிபுணர் விடுத்த அவசர வேண்டுகோள்!

தற்போது நிலவும் அனர்த்தச் சூழல் மற்றும் பண்டிகைக் காலத்தைக் கருத்திற் கொண்டு, நீர்நிலைகளைப் பயன்படுத்தும் போது...