Shehan Semasinghe
செய்திகள்இலங்கை

வீதிகள் துரித அபிவிருத்தி! – இராஜாங்க அமைச்சர் தெரிவிப்பு

Share

விவசாயம் செய்யப்பட்டு வரும் பிரதேச வீதிகள், வைத்தியசாலைகள் பாடசாலைகளுக்கு உட்பிரவேசிக்கும் மற்றும் அவைகளுக்கு அருகில் உள்ள வீதிகள் அனைத்திற்கும் முன்னுரிமை வழங்கப்பட்டு நெடுஞ்சாலை அமைச்சு ஊடாக துரித அபிவிருத்தி மேற்கொள்ளப்பட்டு வருகிறது என இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க தெரிவித்தார்.

செளபாக்யா எதிர்கால கொள்கை பிரகடன திட்டத்திற்கமைய “முன்னுரிமை வீதி” அபிவிருத்தி திட்டத்தின் கீழ் விவசாய செய்கை மேற்கொள்ளப்பட்டு வரும் பிரதேச வீதிகள் அபிவிருத்தி செய்யப்படும் தேவைகள் உணரப்பட்டு இத் திட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

குறித்த வீதிகளை அபிவிருத்தி செய்வது தொடர்பில் ஆளும் மற்றும் எதிர்த் தரப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் முன்வைத்த கோரிக்கைகளுக்கு அமைய இத் திட்டம் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

பிரதேச வீதிகளை அபிவிருத்தி செய்வதன் மூலம் விவசாய மக்கள் தங்களின் உற்பத்திகளை தாமதமின்றி பொருளாதார மத்திய நிலையங்களுக்கு கொண்டு செல்ல முடியும்.

அதன் மூலம் விவசாய மக்கள் பொருளாதாரத்தை இலகுவில் விருத்தி செய்து கொள்ள முடியும் எனவும் இராஜாங்க அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
10 14
செய்திகள்உலகம்

பாகிஸ்தானில் கடும் பொருளாதார நெருக்கடி: அரசு அதிரடி சிக்கன நடவடிக்கைகள் அறிவிப்பு!

மத்திய கிழக்கில் நிலவும் போர்ச் சூழலால் ஏற்பட்டுள்ள உலகளாவிய எரிபொருள் விலை உயர்வு மற்றும் பொருளாதாரப்...

09 14
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இலங்கையின் பல மாகாணங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யும்: வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை!

வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ள சமீபத்திய வானிலை அறிக்கையின்படி, நாட்டின் பல மாகாணங்களில் இன்று பிற்பகல் 2:00...

08 14
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

போதைப்பொருள் பணத்தில் சொத்துச் சேகரிப்பு: 4 கோடி ரூபாய் பெறுமதியான வீடு மற்றும் சொத்துக்கள் முடக்கம்!

போதைப்பொருள் கடத்தல் மூலம் சட்டவிரோதமாக ஈட்டிய பணத்தைப் பயன்படுத்தி சொத்துக்களைச் சேர்த்த குற்றச்சாட்டில், சந்தேகநபர் ஒருவரின்...

05 15
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

சிவனொளிபாதமலைக்கு போதைப்பொருட்களுடன் சென்ற 08 பேர் கைது: மவுசாக்கலை சோதனைச் சாவடியில் சிக்கினர்!

புனித சிவனொளிபாதமலைக்கு யாத்திரை சென்ற பக்தர்கள் என்ற போர்வையில் போதைப்பொருட்களைக் கொண்டு சென்ற 8 பேர்...