sajith 7567
செய்திகள்இலங்கை

நாட்டின் எதிர்காலம் பெரும் ஆபத்தில்!! – எதிர்கட்சித் தலைவர் தெரிவிப்பு

Share

நாட்டின் ஒட்டுமொத்த மாணவர் சமூகத்தின் எதிர்காலமும். நாட்டின் எதிர்காலமும் ஆபத்தில் சிக்கியுள்ளது என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இன்று (07) கட்டளை நியதிகள் சட்டம் 27 (2) கீழ் கேள்விப் பத்திரங்களை அரசாங்கத்திடம் முன்வைத்தார், இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்,

நாட்டின் தற்போதைய அரசாங்கமானது கல்வியில் உள்ள பிரச்சினைகளை முகாமைத்துவம் செய்வதில் ஈடுபாடு இல்லாமல் செயற்பட்டு வருகிறது.,

ஒரு நாட்டின் பொருளாதார, சமூக மற்றும் கலாச்சார வளர்ச்சி கிட்டத்தட்ட அதன் கல்வியின் தரத்தைப் பொறுத்தே அமைந்துள்ளது.

இருப்பினும், கடந்த காலத்தில் செயல்பட்டு வந்த இணையவழி முறையின் மூலம் ஒவ்வொரு குழந்தையும் சமமான கல்வியைப் பெற்றிருக்கும் என்பதில் திருப்திகரமான நிலை இல்லை.

உலகெங்கிலும் உள்ள பிற நாடுகள் கொவிட் நிலைமையை நிர்வகித்தவண்ணம். கல்வி புத்துயிர் பெறுவதற்கும் முன்னுரிமை அளித்துள்ளன.

எனினும், பூரணமாக வழங்கப்படாத க.பொ.த சாதாரண தர முடிவுகள், ஒத்திவைக்கப்பட்ட க.பொ.த உயர்தர மற்றும் புலமைப்பரிசில் பரீட்சைக்காக இந்த நாட்டில் உள்ள அனைத்து குழந்தைகளும் பெற்றோர்களும் காலவரையின்றி காத்திருக்க வேண்டிய நிலை ஏற்ப்பட்டுள்ளது – என்றார்.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
world 45
உலகம்செய்திகள்

பாகிஸ்தானின் பெஷாவர் நகரில் உள்ள தனது தூதரகத்தை மூடிய அமெரிக்கா: பாதுகாப்பு கவலைகள் காரணமா?

பாகிஸ்தானின் கைபர் பக்துன்க்வா மாகாணத்தின் தலைநகரான பெஷாவரில் நீண்டகாலமாகச் செயல்பட்டு வந்த தனது தூதரக அலுவலகத்தை...

world 44
செய்திகள்இந்தியா

வெள்ளித்திரை முதல் அரசியல் அரியணை வரை: விஜய் முதல் எம்.ஜி.ஆர் வரை

தென்னிந்திய நட்சத்திரங்களின் அரசியல் பயணம்தென்னிந்திய அரசியலில், குறிப்பாகத் தமிழ்நாட்டில், திரையுலகிற்கும் அதிகாரத்திற்கும் இடையிலான பிணைப்பு மிகவும்...

world 42
செய்திகள்இலங்கைபிராந்தியம்

விசா பெற்றுத் தருவதாகக் கூறி ரூ. 3.5 கோடி மோசடி: தனியார் நிறுவன இயக்குநர் கைது

வெளிநாடுகளுக்கு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா விசாக்களைப் பெற்றுத் தருவதாகக் கூறி, பொதுமக்களிடமிருந்து சுமார் 35.8 மில்லியன்...

world 46
செய்திகள்உலகம்

ஜெப்ரி எப்ஸ்டீனின் தற்கொலை குறிப்பு வெளியீடு: எவ்வித ஆதாரங்களும் கண்டறியப்படவில்லை என நீதிபதி அறிவிப்பு

பாலியல் குற்றச்சாட்டுகளின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டிருந்த அமெரிக்க கோடீஸ்வரர் ஜெப்ரி எப்ஸ்டீன், கடந்த 2019-ஆம் ஆண்டு...