1020182718117966398730
செய்திகள்அரசியல்இலங்கை

ஊழல், மோசடிகளுக்கு பதிலளிக்க முடியாமல் நேர்காணலை நிறுத்திய ரணில்!!

Share

சிங்கள ஊடகம் ஒன்று நடாத்திய நேர்காணலில் ஊழல், மோசடிகள் குறித்து எழுப்பப்பட்ட கேள்விகளால், கோபமடைந்த முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க நேர்காணலை இடையில் நிறுத்தி விட்டு எழுந்து சென்றுவிட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.

நல்லாட்சி அரசாங்கத்தின் காலத்தில் திருடர்களைப் பாதுகாத்தமை தொடர்பாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க கூறியிருந்தமை தொடர்பிலும் செய்தியாளர்கள் கேள்விக் கணைகளைத் தொடுத்திருந்தனர்.

இக் கேள்விகளால், கோபமடைந்த முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, தான் திருடன் இல்லை என ஏற்றுக்கொள்ளுமாறு செய்தியாளரிடம் கூறியதுடன், நேர்காணலை முன்னெடுப்பது என்றால், நாம் வேறு பிரச்சினைகள் பற்றி பேசுவோம் எனவும் கோபமாகத் தெரிவித்துள்ளார்.

திருடன் என்றால் திருடன் என்று சொல்லுங்கள். இல்லை என்றால் இல்லை என்று கூறுங்கள், இரண்டில் ஒன்றை செய்வோம் அல்லது ஊடக சந்திப்பை நிறுத்துவோம் என முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஊடகவியலாளரிடம் கடிந்துகொண்டுள்ளார்.

எனினும் குறித்த கேள்வியை இடைநிறுத்தாது, தொடர்ந்து கேள்விகள் கணைகள் ரணில் விக்கிரமசிங்கவை நோக்கிச் சென்றதால், நேர்காணலை நிறுத்துவோம்.

நீங்கள் படித்து விட்டு மனதை மாற்றிக்கொண்டு வேறு ஒரு நாள் வாருங்கள் எனக் கூறி விட்டு அவர் எழுந்து சென்றதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

#SRilankaNews

 

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
fl
இலங்கை

பேஸ் புக் காதல் காவல்துறை அதிகாரி உயிர்மாய்ப்பு!

நேற்று அதிகாலை, வலான ஊழல் தடுப்புப்பிரிவில் கடமையாற்றிய காவலதிகாரி ஒருவர் தனது சேவை துப்பாக்கியால் சுட்டுக்கொண்டு...

Namal 2
இலங்கை

நாமல் ராஜபக்ச விடுத்துள்ள சவால்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச, கட்சித் தலைமையகத்தில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில்...

death body
இலங்கை

கட்டடம் இடிந்து வீழ்ந்ததில் பட்டதாரி இளைஞர் பலி!

காத்தான்குடி நூராணிய்யா மையவாடி முதலாம் குறுக்கு வீதியில் நிர்மாணிக்கப்பட்டு வரும் புதிய வீடொன்றில் இடம்பெற்ற கட்டுமானப்...

சுகீஸ்வர பண்டார 1
இலங்கை

இன்றைய நாளில் சுகீஸ்வர பண்டாரவிற்கு நீதிமன்று பிறப்பித்துள்ள உத்தரவு.

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷவின் தனிப்பட்ட செயலாளர் சுகீஸ்வர பண்டார, இன்று கோட்டை நீதவான் நீதிமன்றத்தில்...