basil
செய்திகள்அரசியல்இலங்கை

பொதுச் சேவை நாட்டுக்கு சுமை! – கூறுகிறார் பஸில்

Share

அரசின் பொதுச் சேவை என்பது நாட்டுக்கு பெரும் சுமை. இதனை அனைவரும் ஏற்றுக்கொள்ள வேண்டும். – இவ்வாறு நிதி அமைச்சர் பஸில் ராஜபக்ச தெரிவித்தார்.

நேற்றையதினம் அரச தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது அவர் மேலும் தெரிவிக்கையில்,

பொது சேவைக்காக பணத்தை செலவழிக்கவோ, அரச உத்தியோகத்தர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவோ முடியாது.

விதிக்கப்படவுள்ள வர்த்தக பொருள்கள் மற்றும் சேவை வரிகள் திட்டம் எந்தவோர் அத்தியாவசிய பொருள்களுக்கும் விதிக்கப்படவில்லை. மதுபானம் போன்ற பொருள்களுக்கே வரி விதிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

ஒரு நாட்டில் வரிக்கொள்கையானது அடிக்கடி மாற்றம் செய்யப்படாது நிலையாகப் பேணப்பட வேண்டும். இதுவே எமது நிலைப்பாடாகும். அடிக்கடி வரி விதிப்பில் மாற்றம் ஏற்படுத்தும் போது அனைத்து தரப்பினரும் பாதிக்கப்படுகின்றனர். ஒரு வரிக்கொள்கையானது குறைந்தது மூன்று வருடங்களுக்காவது நடைமுறையில் பேணப்பட வேண்டும்.

விதிக்கப்படவுள்ள புதிய வரிக்கொள்கை தொடர்பில் விரைவில் அனைவருக்கும் அறியத்தருவோம் – என்றார்.

#SrilankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...