basil
செய்திகள்அரசியல்இலங்கை

பொதுச் சேவை நாட்டுக்கு சுமை! – கூறுகிறார் பஸில்

Share

அரசின் பொதுச் சேவை என்பது நாட்டுக்கு பெரும் சுமை. இதனை அனைவரும் ஏற்றுக்கொள்ள வேண்டும். – இவ்வாறு நிதி அமைச்சர் பஸில் ராஜபக்ச தெரிவித்தார்.

நேற்றையதினம் அரச தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது அவர் மேலும் தெரிவிக்கையில்,

பொது சேவைக்காக பணத்தை செலவழிக்கவோ, அரச உத்தியோகத்தர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவோ முடியாது.

விதிக்கப்படவுள்ள வர்த்தக பொருள்கள் மற்றும் சேவை வரிகள் திட்டம் எந்தவோர் அத்தியாவசிய பொருள்களுக்கும் விதிக்கப்படவில்லை. மதுபானம் போன்ற பொருள்களுக்கே வரி விதிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

ஒரு நாட்டில் வரிக்கொள்கையானது அடிக்கடி மாற்றம் செய்யப்படாது நிலையாகப் பேணப்பட வேண்டும். இதுவே எமது நிலைப்பாடாகும். அடிக்கடி வரி விதிப்பில் மாற்றம் ஏற்படுத்தும் போது அனைத்து தரப்பினரும் பாதிக்கப்படுகின்றனர். ஒரு வரிக்கொள்கையானது குறைந்தது மூன்று வருடங்களுக்காவது நடைமுறையில் பேணப்பட வேண்டும்.

விதிக்கப்படவுள்ள புதிய வரிக்கொள்கை தொடர்பில் விரைவில் அனைவருக்கும் அறியத்தருவோம் – என்றார்.

#SrilankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
bus bike accident 1
இலங்கை

தாயையும் மகனையும் காவுகொண்ட கோரவிபத்து!

பகமூண, தமன பகுதியில், பேருந்து ஒன்றும் மோட்டார் சைக்கிள் ஒன்றும் மோதி விபத்துக்குள்ளானதில் பெண் ஒருவர்...

கடூழிய சிறைத்தண்டனை
இலங்கை

சிறுமி துஸ்பிரயோகம் – சந்தேக நபருக்கு வவுனியா நீதிமன்றம் வழங்கிய அதிரடி தீர்ப்பு.

கடந்த 2015, 2016 ஆம் ஆண்டு காலப்பகுதியில் வவுனியா, தரணிக்குளம் பிரதேசத்தில் தாயினால் கைவிடப்பட்ட தந்தையின்...

பேருந்து கவிழ்ந்து விபத்து
இலங்கை

பேருந்து கவிழ்ந்து விபத்து – மஹகொடையாய பகுதியில் சம்பவம்!

மொனராகலையிலிருந்து தனமல்வில நோக்கிப் பயணித்த இலங்கை போக்குவரத்து சபைக்குச் சொந்தமான பேருந்து ஒன்று புத்தல –...

ரத்மலானா சைமா
இலங்கை

பேராதனை காவல்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டார் ‘ரத்மலானா சைமா’

‘ரத்மலானே சைமா’, மலேசியாவில் கைது செய்யப்பட்டு இலங்கை கொண்டுவரப்பட்ட நிலையில் மேலதிக விசாரணைகளுக்காக பேராதனை காவல்துறையினரிடம்...