Mahinda 1 1
செய்திகள்அரசியல்இலங்கை

மிக விரைவில் மாகாண சபைத் தேர்தல்! – மஹிந்த தெரிவிப்பு

Share

கூடிய விரைவில் மாகாண சபைத் நடக்கும் என்று பிரதமர் மஹிந்த ராஜபக்ச தெரிவித்தார்.

தமிழ்ப் பத்திரிகைகளின் ஆசிரியர்களைப் பிரதமர் நேற்று அலரிமாளிகையில் சந்தித்துக் கலந்துரையாடினார். இதன்போது ”மாகாணசபைத் தேர்தல் விரைவில் நடக்குமா?’ – என்ற கேள்விக்குப் பதிலளித்த அவர்,

”ஆம். நடக்கும். கூடிய விரைவில் நடக்கும். எந்த முறைமையின் கீழ் மாகாண சபைத் தேர்தலை நடத்துவதென விரைவில் தீர்மானிக்கப்படும்” – என்றார்.

இலங்கையின் பொருளாதார நெருக்கடிக்கு உதவுவதில் இந்தியா முக்கிய பங்கை வகிக்கின்றது எனவும் இந்தச் சந்திப்பின்போது பிரதமர் மஹிந்த ராஜபக்ச குறிப்பிட்டார்.

உக்ரைனில் ஏற்பட்டுள்ள மோதல் நிலைமை இலங்கைக்கும் தாக்கத்தை ஏற்படுத்தும் எனவும், சுற்றுலாப் பயணிகள் வருகை, இலங்கையின் ஏற்றுமதி என்பன பாதிக்கப்படும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
மேர்வின் சில்வா
இலங்கை

மேர்வின் சில்வாவிற்கு எதிராக குற்றப்பத்திரிக்கை தாக்கல்.

கிரிபத்கொடவிலுள்ள அரசிற்குச் சொந்தமான காணியொன்றை, போலி ஆவணங்களைப் பயன்படுத்தி விற்க முயன்றதாக சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டின் கீழ்,...

Death penalty 22 1
இலங்கை

பதினைந்து வருட கால வழக்கு – மரண தண்டனை தீர்ப்பு.

கடந்த 2011-ஆம் ஆண்டு எல்பிட்டிய காவல்துறை பிரிவிற்குட்பட்ட பகுதியில் நடைபெற்ற கொலை வழக்கில், பாலபிட்டிய உயர்...

Chemmani Mass Graves
இலங்கை

இன்றைய தினத்திலும் செம்மணியில் சிறார்களின் எலும்புக்கூடுகள்.

செம்மணி சித்துப்பாத்தி மனித புதைகுழியின் மூன்றாம் கட்டத்தின் மூன்றாம் பகுதி அகழ்வு பணிகள் இன்றைய தினம்...

Resignation
இலங்கை

நீர்கொழும்பு மாநகர சபை மேயர் பதவி விலகல்.

தேசிய மக்கள் சக்தி ஆட்சியிலுள்ள நீர்கொழும்பு மாநகர சபையின் மேயர் ரொபர்ட் ஹீன்கெந்த தமது பதவியிலிருந்து...