dfdf
செய்திகள்இலங்கை

மார்ச் மாதத்துக்கு முன் மாகாண சபை தேர்தல் – பஸில் அறிவிப்பு

Share

மாகாண சபைத் தேர்தல் உடனடியாக நடத்தப்பட வேண்டும். அதன்படி அடுத்த ஆண்டு மார்ச் மாதத்துக்கு முன்பாக மாகாண சபைத் தேர்தலை நடத்த அரசு தீர்மானித்துள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய வெளிவிவகார செயலர், ஜனாதிபதி, பிரதமர், நிதியமைச்சர் பஸில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மற்றும் அரசியல் கட்சிகளை தனித்தனியே சந்தித்து கலந்துரையாடியிருந்தார்.

இதன்போது 13 ஆவது திருத்தச் சட்டம் தொடர்பிலும் மாகாண சபைத் தேர்தல் தொடர்பிலும் அவதானம் செலுத்தப்பட்டது.

இந்த நிலையில் மாகாண சபைத் தேர்தல் தொடர்பான அறிவிப்பு வெளியாகியுள்ளது.

தேர்தல் முறைமைகள் தொடர்பில் ஆராய நியமிக்கப்பட்ட அமைச்சர் தினேஷ் குணவர்த்தன தலைமையிலான நாடாளுமன்ற தெரிவுக்குழுக் கூட்டம் நடைபெற்றது.

இதில் கருத்து வெளியிட்ட நிதியமைச்சர் பஸில் ராஜபக்ச மாகாண சபைத் தேர்தலை உடனடியாக எதிர்வரும் மார்ச் மாதத்துக்கு முன் நடத்த அரசு தீர்மானித்துள்ளது.

இதற்கான தேர்தல்கள் சட்டங்களை உடனடியாக நிறைவேற்ற வேண்டிய தேவை உள்ளது. இந்த விடயத்துக்கு சில வேளையில் நாடாளுமன்றில் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மை ஆதரவு தேவைப்படலாம் எனத் தெரிவித்துள்ளார்.

இதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் மூன்றில் இரண்ட பங்கு நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவு கட்டாயம் அல்ல. இது தொடர்பில் தனிநபர் சட்டமூலம் ஒன்றை சமர்ப்பித்திருக்கிறேன்.

இந்த சட்டமூலத்துக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு , ஐக்கிய மக்கள் சக்தி, ஜே.வி.பி என அனைத்து கட்சிகளும் ஆதரவளிப்பதால் முழு நாடாளுமன்ற ஆதரவோடு சட்டம் நிறைவேற்றலாம் என்று தெரிவித்துள்ளார்.

சுமந்திரன் எம். பியின் கருத்தை சட்ட மா அதிபரின் பிரதிநிதி, அனைத்து உறுப்பினர்களும் ஏற்றுக் கொண்டனர்.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
world 45
உலகம்செய்திகள்

பாகிஸ்தானின் பெஷாவர் நகரில் உள்ள தனது தூதரகத்தை மூடிய அமெரிக்கா: பாதுகாப்பு கவலைகள் காரணமா?

பாகிஸ்தானின் கைபர் பக்துன்க்வா மாகாணத்தின் தலைநகரான பெஷாவரில் நீண்டகாலமாகச் செயல்பட்டு வந்த தனது தூதரக அலுவலகத்தை...

world 44
செய்திகள்இந்தியா

வெள்ளித்திரை முதல் அரசியல் அரியணை வரை: விஜய் முதல் எம்.ஜி.ஆர் வரை

தென்னிந்திய நட்சத்திரங்களின் அரசியல் பயணம்தென்னிந்திய அரசியலில், குறிப்பாகத் தமிழ்நாட்டில், திரையுலகிற்கும் அதிகாரத்திற்கும் இடையிலான பிணைப்பு மிகவும்...

world 42
செய்திகள்இலங்கைபிராந்தியம்

விசா பெற்றுத் தருவதாகக் கூறி ரூ. 3.5 கோடி மோசடி: தனியார் நிறுவன இயக்குநர் கைது

வெளிநாடுகளுக்கு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா விசாக்களைப் பெற்றுத் தருவதாகக் கூறி, பொதுமக்களிடமிருந்து சுமார் 35.8 மில்லியன்...

world 46
செய்திகள்உலகம்

ஜெப்ரி எப்ஸ்டீனின் தற்கொலை குறிப்பு வெளியீடு: எவ்வித ஆதாரங்களும் கண்டறியப்படவில்லை என நீதிபதி அறிவிப்பு

பாலியல் குற்றச்சாட்டுகளின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டிருந்த அமெரிக்க கோடீஸ்வரர் ஜெப்ரி எப்ஸ்டீன், கடந்த 2019-ஆம் ஆண்டு...