mandaitivu
செய்திகள்அரசியல்இலங்கை

மண்டைதீவு கிரிக்கெட் மைதானத் திட்டம் சட்டவிரோதமானது – ஜனாதிபதியிடம் WNPS அவசர முறைப்பாடு!

Share

யாழ்ப்பாணம் மண்டைதீவில் அமைக்கப்படவுள்ள சர்வதேச கிரிக்கெட் மைதானம் மற்றும் விளையாட்டு வளாகத் திட்டம், சூழலியல் ரீதியாகப் பாரிய அழிவை ஏற்படுத்தும் என இலங்கை வனவிலங்கு மற்றும் இயற்கை பாதுகாப்பு சங்கம் (WNPS) எச்சரித்துள்ளது.

இத்திட்டத்தை உடனடியாக நிறுத்துமாறு கோரி ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவுக்கு அனுப்பப்பட்டுள்ள கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ள முக்கிய விடயங்கள். மைதானம் அமையவுள்ள பகுதியில் கண்டல் தாவரங்கள், கடல் புற்கள், உப்பளங்கள் மற்றும் வனச்சரகங்கள் உள்ளன. இவை அத்தீவின் இயற்கைச் சமநிலையைப் பேணுவதில் முக்கிய பங்கு வகிக்கின்றன.

கடலோரப் பாதுகாப்பு மற்றும் வள முகாமைத்துவச் சட்டத்தின் கீழ் ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனம் (SLC) முறையான அனுமதிகளைப் பெறவில்லை என குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

மண்டைதீவு ஒரு இயற்கை வெள்ளத் தடுப்பு வலயமாகும். மழைக்காலங்களில் நீரில் மூழ்கும் இப்பகுதியில் பாரிய கட்டுமானங்களை மேற்கொள்வது பாரிய நிதி விரயத்திற்கு வழிவகுக்கும்.

இத்திட்டம் தொடர்பாக உரிய அதிகாரிகளுக்குத் தவறான தகவல்கள் வழங்கப்பட்டு, இலங்கையின் நிலையான அபிவிருத்திக் கொள்கை மீறப்பட்டுள்ளதாக சங்கம் கவலை தெரிவித்துள்ளது.

“எங்கள் எதிர்ப்பு யாழ்ப்பாணத்தில் விளையாட்டு வசதிகளை மேம்படுத்துவதற்கு எதிரானது அல்ல. மாறாக, சூழலியல் முக்கியத்துவம் வாய்ந்த ஒரு பகுதியில் சட்டங்களை மீறி இத்திட்டத்தை முன்னெடுப்பதற்கு மட்டுமே,” என WNPS தெளிவுபடுத்தியுள்ளது.

இந்த விவகாரம் குறித்து விரிவான விசாரணை நடத்தி, சுற்றுச்சூழலைப் பாதுகாக்கும் வகையில் இத்திட்டத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

 

 

Share
தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...