sl
செய்திகள்இலங்கை

பிரித்தானியாவில் புலிகள் மீதான தடை தொடர்ந்தும் நீடிப்பு – கூறுகிறது இலங்கை அரசு

Share

பிரித்தானியாவில் புலிகள் மீதான தடை தொடர்ந்தும் நீடிப்பு – கூறுகிறது இலங்கை அரசு

பிரித்தானியாவில் புலிகள் மீதான தடை தொடர்ந்தும் நீடிப்பு – கூறுகிறது இலங்கை அரசுதமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பு மீதான பிரித்தானியா அரசின் தடையானது தொடர்ந்து அமுலில் இருக்கும். இவ்வாறு பிரித்தானிய உள்துறை அமைச்சர் பிரத்தியேகமாக தமக்கு அறிவித்துள்ளார் என இலங்கை வெளிநாட்டு அமைச்சு தெரிவித்துள்ளது.

இது தொடர்பில் இலங்கை வெளிநாட்டு அமைச்சு மேலும் தெரிவித்துள்ளதாவது,

பிரித்தானியாவில், பயங்கரவாதத்துக்கு எதிராக நிறைவேற்றப்பட்ட தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பு மீதான தடையை மீளப்பெறுமாறு விண்ணப்பிக்கப்பட்டிருந்தது. குறித்த விண்ணப்பத்தை ஆராய்ந்த பிரித்தானிய அரசு, இந்த தடை தொடர்ச்சியாக அமுலாக்கப்படும் என தெரிவித்துள்ளது.

இதேவேளை, பயங்கரவாதத்துக்கு எதிரான உலகளாவிய போராட்டத்தில் ஐக்கிய இராச்சியம் உட்பட அனைத்து அரசாங்கங்களுடனான கூட்டுறவை இலங்கை அரசாங்கம் வரவேற்கிறது.

மக்களின் உயிருக்கு அச்சுறுத்தல், உலகளாவிய மற்றும் பிராந்திய அமைதி, பாதுகாப்பு ஆகியவற்றுக்கு ஆபத்து போன்றவற்றை ஏற்படுத்தும் பயங்கரவாதத்தை அழிப்பதற்கான அனைத்து முயற்சிகளிலும் ஐக்கிய இராச்சியத்துடன் இணைந்து பணியாற்றுவதற்கு நாம் உறுதிபூண்டுள்ளோம் – என தெரிவித்துள்ளது.

இதேவேளை. விடுதலைப் புலிகள் அமைப்பு மீதான தடை நீடிப்பு தொடர்பில் இதுவரை பிரித்தானியா அரசாங்கம் உத்தியோகபூர்வ அறிவிப்புக்கள் எதனையும் வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

21 6130f5abb5592

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
25 688de9f74b46a
இலங்கைசெய்திகள்

உள்நாட்டு இறைவரித் திணைக்களம் விடுத்துள்ள அறிவிப்பு

2024/2025 மதிப்பீட்டு ஆண்டிற்கான வருமான அறிக்கைகளைச் சமர்ப்பிப்பதற்காக வழங்கப்பட்ட தனிப்பட்ட அடையாள எண்ணின் (PIN) செல்லுபடியாகும்...

25 688e26468e8e8
சினிமாசெய்திகள்

தென்னிந்திய நகைச்சுவை நடிகர் மதன் பாபு காலமானார்

தென்னிந்திய நகைச்சுவை நடிகர் மதன் பாபு உடல்நலக் குறைவால் காலமானார். அவர் தனது 71ஆவது வயதில்...

25 688df4fc39fbe
இலங்கைசெய்திகள்

வாய்த்தர்க்கத்தில் ஒருவர் சுட்டுக்கொலை.. பொலிஸாரிடம் சரணடைந்த சந்தேகநபர்

அம்பலாந்தோட்டை, ஹுங்கம பிங்காம பகுதியில் இன்று (02) மதியம் துப்பாக்கிச் சூடு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது....

25 688e158f2c449
இலங்கைசெய்திகள்

சட்டத்தை நடைமுறைப்படுத்தியவரால் நிராகரிக்கப்பட்ட ஜனாதிபதி சிறப்புரிமைகள்

இலங்கையின் முதல் நிறைவேற்றதிகார ஜனாதிபதியான ஜே.ஆர்.ஜெயவர்த்தனவால் கொண்டுவரப்பட்ட ஜனாதிபதிகளுக்கான சலுகைகளை அவரே பெற்றுக்கொள்ளவில்லை என அரசியல்...