Gtta and TNA
செய்திகள்அரசியல்இலங்கை

ஜனாதிபதி – கூட்டமைப்பினர் 15 இல் சந்திப்பு!

Share

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கும், இரா. சம்பந்தன் தலைமையிலான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் இடையிலான சந்திப்பொன்று எதிர்வரும் 15 ஆம் திகதி ஜனாதிபதி செயலகத்தில் நடைபெறவுள்ளது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளரும், ஜனாதிபதி சட்டத்தரணியுமான எம்.ஏ. சுமந்திரன் இந்த தகவலை உறுதிப்படுத்தியுள்ளார்.

ஜனாதிபதித் தேர்தலில் கோட்டாபய ராஜபக்ச வெற்றிபெற்ற பின்னர், அவருடன் பேச்சு நடத்துவதற்கான கோரிக்கையை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு விடுத்திருந்தது. அதன்பின்னரும் சில தடவைகள் ஊடகங்கள் வாயிலாகவும் சந்திப்புக்கு நேரம் கோரப்பட்டது.

எனினும், ஜனாதிபதி தரப்பில் இருந்து நேரம் ஒதுக்கப்படவில்லை. இரு தடவைகள் வாய்ப்பு வழங்கப்பட்டிருந்தாலும் இறுதி நேரத்தில் சந்திப்பு பிற்போடப்பட்டது.

இந்நிலையில் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இணைந்து, ஜனாதிபதி செயலகம் முன்பாக போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்நிலையிலேயே சந்திப்புக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
gold price growth
இலங்கை

இன்றைய நாளில் உயர்வினை பதிவு செய்த தங்கத்தின் விலை.

இலங்கையில் தங்கத்தின் விலை இன்று அதிகரிப்பை பதிவு செய்துள்ளதாக அகில இலங்கை நகையக வியாபாரிகள் சங்கம்...

sajith premadasa
இலங்கை

எதிர்க்கட்சித் தலைவர் கொண்டுவந்துள்ள நம்பிக்கையில்லா தீர்மானம்.

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச உள்ளிட்ட எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள், இன்று பாராளுமன்றத்தில் வைத்து நம்பிக்கையில்லாத்...

Suresh Salley
இலங்கை

மீண்டும் விசாரணைக்கு வந்த சுரேஷ் சலே வழக்கு.

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகளுக்காக , பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது...

body
இலங்கை

இரத்தினபுரியில் மீட்கப்பட்ட இளம்பெண்ணின் சடலம்!

  இரத்தினபுரி , கொடிகமுவவில் பகுதியில் தனியாக வசித்து வந்த 32 வயதான கமகே நிசான்ச...