WhatsApp Image 2022 01 24 at 9.26.57 PM
செய்திகள்இந்தியா

எருது ஆட்டத்திற்கு முட்டுக்கட்டை போட்ட பொலிஸார்!!

Share

இந்தியாவின் பாரம்பரியக் கலைகளான எருது ஆட்டம் மற்றும் ஜல்லிக்கட்டு என்பவை ஆண்டு தொடக்கத்தையொட்டி மிகவும் சிறப்பாக நடைபெற்று வருகின்றன.

எனினும் கொரோனா ஊரடங்கு காரணமாக குறித்த நிகழ்ச்சிகளுக்கு பொலிஸாரின் அனுமதி பெற வேண்டியது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

எனினும் சில இடங்களில் கட்டுப்பாடுகளையும் மீறி எருதாட்டம், ஜல்லிக்கட்டு போன்ற நிகழ்வுகள் நடத்தப்பட்டு வருகின்றன.

அந்த வகையில் நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் அடுத்த நாமகிரிப்பேட்டை அருகே உள்ள கரியாம்பட்டி பகுதியில் நேற்றைய தினம் இளைஞர்கள் எருதுவிடும் நிகழ்ச்சியை நடத்துவதற்காக ஒன்று திரண்டனர்.

இதற்காக ஊரில் உள்ள எருதுகளை கோவிலைச் சுற்றி இளைஞர்கள் அழைத்து வந்தனர். எனினும் குறித்த நிகழ்ச்சிக்கு எதுவித அனுமதியும் பெறாத காரணத்தினால் சம்பவ இடத்திற்கு விரைந்த ஆயில்பட்டி பொலிஸார் எருதுவிடும் நிகழ்ச்சியை தடுத்து நிறுத்தினர்.

#India

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
21 10
இலங்கைசெய்திகள்

இலங்கையில் உள்ள தாதியர்களுக்கு வெளியான மகிழ்ச்சித் தகவல்

இலங்கையில் மிக விரைவில் தாதியருக்கான பல்கலைக்கழகம் ஒன்று அமைக்கப்படும் என்று சுகாதார மற்றும் வெகுசன ஊடகத்துறை...

22 9
இலங்கைசெய்திகள்

கொழும்பு மாநகர சபையின் மேயரை நியமிப்பில் எடுக்கப்பட்ட தீர்மானம்

கொழும்பு மாநகர சபையின் மேயர் மற்றும் பிரதி மேயரை தேர்ந்தெடுப்பதற்கான வாக்கெடுப்பு ஒன்று அடுத்த மாதம்...

20 15
இலங்கைசெய்திகள்

மகிந்தவை திடீரென சந்திக்க சென்ற ரணில்

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவை சந்திக்க முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவரது வீட்டிற்கு சென்றுள்ளார்....

16 16
இலங்கைசெய்திகள்

தேடப்பட்டு வந்த டீச்சர் அம்மாவுக்கு பிணை அனுமதி

தரம் 5 புலமைப்பரிசில் தேர்வுக்கு தயாராகும் மாணவர்களுக்கு பிரத்யேக வகுப்புகளை நடத்தும், ‘டீச்சர் அம்மா’ என்று...