police
செய்திகள்இலங்கைபிராந்தியம்

திருடனைச் சுற்றிவளைத்து அடித்துக் கொன்ற மக்கள்!

Share

கொழும்பில் வீடொன்றிற்குள் நுழைந்து, கொள்ளையடிக்க முயன்ற போது, பிரதேச மக்களிடம் சிக்கி, அவர்களின் தாக்குதலுக்கு இலக்காகி ஒருவர் உயிரிழந்துள்ளார்.

முல்லேரியா, மாளிகாகொடெல்ல பிரதேசத்தில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இச்சம்பவம் குறித்து தெரியவருவதாவது;

கொள்ளையடிப்பதற்கு மூவர் அடங்கிய குப்பல் ஒன்று முயற்சித்தவேளை, வீட்டில் உள்ளவர்கள் கத்தி கூச்சலிட்டமையினால் அயலவர்கள் சம்பவ இடத்திற்கு வந்துள்ளனர்.

இதனையடுத்து மூவரில் இருவர் தப்பிச் சென்ற நிலையில், ஒருவர் அயலவர்களிடம் சிக்கியுள்ளார்.

அப்பிரதேச மக்கள் குறித்த கொள்ளையரைத் தாக்கியதில், படுகாயமடைந்தவர், கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.

இச்சம்பவத்தில் உயிரிழந்தவர் இதுவரையில் அடையாளம் காணப்படவில்லை என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

#SrilankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
world 53
செய்திகள்இலங்கைபிராந்தியம்

வெல்லம்பிட்டியில் 4 கோடி ரூபா பெறுமதியான போதைப்பொருட்கள் மீட்பு: இருவர் கைது

கொழும்பு, வெல்லம்பிட்டி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவினர் (PNB) நேற்று (மே...

world 52
செய்திகள்இலங்கைபிராந்தியம்

கொழும்பில் பிடிபட்ட 74 வியட்நாமியர்களுக்கு மே 14 வரை விளக்கமறியல்: நீதிமன்றம் அதிரடி உத்தரவு

கொழும்பு, கொள்ளுப்பிட்டி பகுதியில் உள்ள உத்தராநந்த மாவத்தையில் அமைந்துள்ள குடியிருப்பு வளாகம் ஒன்றில் வைத்து, இணையவழி...

world 51
செய்திகள்இலங்கைபிராந்தியம்

ஊழலுக்கு எதிராகக் குரல் கொடுத்துப் பதவி விலகிய NPP உறுப்பினர்: ராஜினாமா கடிதம் கசிந்த விவகாரத்தில் சர்ச்சை

தேசிய மக்கள் சக்தி (NPP) கட்சியின் குருநாகல் மாநகர சபை உறுப்பினர் பி.டபிள்யூ. பிரேமச்சந்திரா, தனது...

world 50
செய்திகள்இலங்கைபிராந்தியம்

தோல் புற்றுநோய் அபாயம்: காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை அவதானம் தேவை

இலங்கையில் தோல் புற்றுநோயால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாகச் சுகாதார மேம்பாட்டுப் பணியகம் எச்சரிக்கை விடுத்துள்ளது....