vv2
செய்திகள்இலங்கை

மாவீரர் நாள் நினைவேந்தல் – வல்வெட்டித்துறையில் திரண்ட மக்கள் – பொலிஸ், இராணுவம் குவிப்பு

Share

மாவீரர் நாள் நினைவேந்தல் நிகழ்வுகளை முன்னிட்டு வல்வெட்டித்துறை ரேவடி கடற்கரைப் பகுதியில் பொலிஸார் மற்றும் இராணுவத்தினர் குவிக்கப்பட்டுள்ளனர்.

அஞ்சலி நிகழ்வுகளை மேற்கொள்ளும் முகமாக சிவாஜிலிங்கம் தலைமையிலான குழுவினர் வல்வெட்டித்துறை ரேவடி கடற்கரைப் பகுதிக்கு சென்றுள்ளனர்.

இந்த நிலையிலேயே அங்கு பொலிஸார் மற்றும் இராணுவத்தினர் குவிக்கப்பட்டுள்ளதுடன் இராணுவ வாகனங்கள் மற்றும் புலனாய்வு பிரிவினரும் குவிக்கப்பட்டுள்ளனர்.

மாவீரர் நாளை முன்னிட்டு யுத்தத்தால் உயிரிழந்த மக்களுக்கு அஞ்சலி செலுத்தும் முகமாக சிவாஜிலிங்கம், வட மாகாண சபை முன்னாள் அமைச்சர் அனந்தி சசிதரன் உள்ளிட்டோர் வல்வெட்டித்துறை ரேவடி கடற்கரைப் பகுதியை நோக்கி நடைப் பயணத்தை ஆரம்பித்து அங்கு சென்றுள்ளனர்.

இந்த நிலையில் தற்போது அந்த பகுதியில் பதற்றநிலை ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

vv4 vv3 vv2 vv1 vv

#SriLankaNews

Share

1 Comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
இலங்கை கடற்பரப்பில் 09 இந்திய மீனவர்கள் கைது
இலங்கை

இலங்கை கடற்பரப்பில் 09 இந்திய மீனவர்கள் கைது.

நேற்று இரவு வேளையில், தலைமன்னார் உருமலை முனைக்கு அப்பால் உள்ள கடற்பரப்பில் சட்டவிரோதமாக மீன்பிடித்துக் கொண்டிருந்த...

எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ்
இலங்கை

இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் முன்னிலையானார் பாராளுமன்ற உறுப்பினர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ்!

இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவில், பாராளுமன்ற உறுப்பினர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் வாக்குமூலம் ஒன்றை வழங்குவதற்காக முன்னிலையாகியுள்ளார்....

liver
இலங்கை

இளம் தலைமுறையினர் மத்தியில் அதிகரித்து வரும் நோய்த்தாக்கம்.

இரைப்பை குடல் மற்றும் கல்லீரல் வைத்திய நிபுணர் சுபுன் குலதுங்க, இளைஞர்கள் மத்தியில் குடல் சார்ந்த...

நாடாளுமன்ற உறுப்பினர்களின் வேதனம்
இலங்கை

நாடாளுமன்ற உறுப்பினர்களின் வேதனம் உயர்த்தப்பட்டுள்ளதா?

அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ, இன்று நடைபெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பில்...