unnamed
செய்திகள்அரசியல்இலங்கை

பங்காளிக்கட்சித் தலைவர்கள் உடனடியாக பதவி துறக்க வேண்டும்! – பெரமுன வலியுறுத்து

Share

“அரசை விமர்சிக்கும் பங்காளிக்கட்சித் தலைவர்கள் உடனடியாக அமைச்சு பதவிகளை துறக்க வேண்டும். அவ்வாறு இல்லாவிட்டால் மொட்டு கட்சி தலைவர்கள் அவர்களை வெளியேற்ற வேண்டும்.”- என்று வலியுறுத்தியுள்ளார் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ குட்டியாராச்சி.

மொட்டு கட்சி தலைமையகத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே அவர் இவ்வாறு வலியுறுத்தினார்.

” அரச கூட்டணியிலுள்ள பங்காளிக்கட்சித் தலைவர்கள் அமைச்சு பதவி உட்பட அனைத்து சலுகைகளையும், வரப்பிரதாசங்களையும் அனுபவிக்கின்றனர். ஆனாலும் அரசை விமர்சிக்கின்றனர். இவர்கள் தமது தனிப்பட்ட தேவைகளை நிறைவேற்றிக்கொள்ளவே இவ்வாறு செயற்படுகின்றனர்.

அமைச்சு பதவி கிடைக்கவில்லை என்பதால் தயாசிறி ஜயசேகர உளறுகிறார். தனக்கு அமைச்சு பதவி கிடைக்கவில்லை என திஸ்ஸ வித்தாரண வெளிப்படையாகவே கவலை வெளியிட்டுள்ளார். விமல் வீரவன்ச, கம்மன்பில போன்றவர்களும் இப்படிதான். தனிப்பட்ட தேவைகளுக்காகவே அவர்கள் அரசை விமர்சிக்கின்றனர்.

விமர்சிப்பதாக இருந்தால் வெளியே சென்று விமர்சிக்க வேண்டும். அவ்வாறு இல்லாவிட்டால் இவ்வாறானவர்களை எமது கட்சி தலைவர்கள் வெளியேற்ற வேண்டும்.”- என்றார் திஸ்ஸ குட்டியாராச்சி எம்.பி.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
Untitled 27
செய்திகள்விளையாட்டு

ஐபிஎல் 2026: சன்ரைசர்ஸை வீழ்த்தி நடப்பு சாம்பியன் பெங்களூரு அணி அபார வெற்றி!

ஐபிஎல் 2026 தொடரின் தொடக்க ஆட்டத்தில், நடப்பு சாம்பியனான ரோயல் செலஞ்சர்ஸ் பெங்களூரு (RCB) அணி,...

Untitled 26
செய்திகள்இலங்கைபிராந்தியம்

மின்சாரக் கட்டணத் திருத்தம்: பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் இறுதி முடிவு நாளை!

இலங்கையில் எதிர்வரும் ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான காலப்பகுதிக்கான மின்சாரக் கட்டணத் திருத்தம் குறித்த தனது...

Untitled 25
உலகம்செய்திகள்

ஆந்த்ரோபிக் நிறுவனத்தின் புதிய ஏஐ இரகசியங்கள் கசிவு: சைபர் பாதுகாப்பு நிறுவனங்களுக்குப் பெரும் சவால்!

உலகின் முன்னணி செயற்கை நுண்ணறிவு (AI) நிறுவனமான ஆந்த்ரோபிக் (Anthropic), உருவாக்கி வரும் தனது அடுத்த...

01 39
செய்திகள்இலங்கைபிராந்தியம்

சீன ஆய்வுக்கப்பல் ஊழியருக்கு அவசர சிகிச்சை: மனிதாபிமான அடிப்படையில் உதவிய இலங்கை கடற்படை!

இலங்கையின் பிரத்தியேக பொருளாதார வலயத்திற்குள் (EEZ) நங்கூரமிட்டிருந்த சீன ஆய்வுக்கப்பலான ‘ஷி யான் 6’ (Shi...