chinaaa
செய்திகள்உலகம்

குழந்தைகள் பெற்றால் சொந்த வீடு! – அரசு அதிரடி

Share

குழந்தைகள் பெற்றால் சொந்த வீடு! – அரசு அதிரடி

சீனாவில் இரண்டு அல்லது மூன்று குழந்தைகள் பெற்றுக்கொண்டால் சொந்த வீட்டு மானியம் அளிக்கப்படும் என சீனாவின் கன்சு மாகாணம் அறிவித்துள்ளது.

உலகின் அதிக சனத்தொகை கொண்ட நாடான சீனா நாட்டின் சனத்தொகையை கட்டுப்படுத்தும் நோக்கில் பல்வேறு செயற்றிட்டங்களை நடைமுறைப்படுத்தி வந்தது.

இந்த நிலையில் அங்கு தற்போது சனத்தொகை பெரிதும் வீழ்ச்சியடைந்துள்ளது.

இதனால் குழந்தை பிறப்பை ஊக்குவிக்க தற்போது அரசு பல்வேறு சலுகைகளை வழங்கத் திட்டமிட்டுள்ளது.

அதன்படி சீனாவில் கடந்த ஓகஸ்ட் மாதம் முதல் 3 குழந்தைகள் பெற்றுக்கொள்ள சட்டரீதியாக அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் சீனாவின் கன்சு மாகாணம் 2 அல்லது 3 குழந்தைகள் பெற்றுக்கொண்டால் 40 ஆயிரம் யுவான் ( இலங்கை மதிப்பில் சுமார் 12 லட்சத்து 40 ஆயிரம்) ரூபா பெறுமதியில் மானியம் வழங்கப்படும் எனத் தெரிவித்துள்ளது.

இதனைக் கொண்டு தம்பதியர் வீடு வாங்கலாம். அத்துடன் 3 வயதாகும் வரை ஒவ்வொரு குழந்தைக்கும் ஆண்டுக்கு 10 ஆயிரம் யுவான் (இலங்கை மதிப்பில் சுமார் 3 லட்சம் வரை) மானியம் வழங்கப்படும் எனவும் அறிவிக்கப்படுகிறது.

மேலும் இதேபோல் 11 சலுகைகளை 3 குழந்தைகள் பெறும் தம்பதிகள் பெற முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
35
சினிமாசெய்திகள்

ஸ்வாசிகா யாருடைய DIE HARD FAN தெரியுமா? நேர்காணலில் மனம் திறந்த ஸ்வாசிகா..!

தற்போது தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக வலம் வருபவர் ஸ்வாசிகா. இவர் பல திரைப்படங்களை நடித்தது...

33 1
சினிமாசெய்திகள்

விசில் போட தயாரா? பூஜையுடன் ஆரம்பமானது ஜீவாவின் 45வது படம்..! வைரலாகும் போட்டோஸ்!

தமிழ் சினிமா வட்டாரத்தில் இன்று ஒரு முக்கியமான தினமாக அமைந்துள்ளது. நடிகர் ஜீவா தனது 45வது...

30
சினிமாசெய்திகள்

மாளவிகா மோகனன் GQ ஷூட்டில் கவர்ச்சிகரமான லுக்…! ரசிகர்கள் மயக்கும் போட்டோஸ்..!

தமிழ் சினிமாவின் ஸ்டைலிஷ் குயின் மாளவிகா மோகனன், மீண்டும் ஒரு முறை சமூக வலைதளங்களை சிலையாய்...

34
சினிமாசெய்திகள்

“லெனின்” படத்தில் இருந்து விலகிய ஸ்ரீலீலா..!படத்தின் ஹீரோயினி யார் தெரியுமா?

பிரபல தெலுங்கு நடிகரும் தயாரிப்பாளருமான நாகார்ஜுனாவின் இளைய மகன் அகில் அக்கினேனி, புது பரிமாணத்துடன் திரையில்...