New Project 44
செய்திகள்இலங்கை

அச்சுறுத்தப்பட்ட அரசியல் கைதிகள்! – நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு

Share

இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்தவினால் துப்பாக்கி முனையில் அச்சுறுத்தலுக்குள்ளான 08 சிறைக்கைதிகளுக்கு உரிய பாதுகாப்பை வழங்குமாறு உயர் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.

இதற்கமைய, குறித்த அரசியல் கைதிகளுக்கு உடனடி பாதுகாப்பை வழங்குமாறு சிறைச்சாலைகள் ஆணையாளா் நாயகத்துக்கு சட்டமா அதிபர் அறிவித்துள்ளாா்.

கடந்த சில தினங்களுக்கு முன்னர் அநுராதபுரம் சிறையில் தமிழ் அரசியல் கைதிகளை இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த துப்பாக்கி முனையில் அச்சுறுத்திய சம்பவம் பெரும் பரப்பரப்பை ஏற்படுத்தியிருந்தது.

இதனை, தொடர்ந்து இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்தவை கைது செய்யுமாறு கோரி குற்ற விசாரணை பிரிவில் சிறை கைதிகளை பாதுகாக்கும் குழு முறைப்பாடு செய்துள்ளது.

லொஹான் ரத்வத்த மீது குற்றவியல் சட்டம் செயற்படுத்தப்பட்டு அவரை கைது செய்து நீதிமன்றில் ஆஜர் செய்ய வேண்டும் என கைதிகள் பாதுகாப்பு குழு குறிப்பிட்டிருந்தது.

இதற்கமைய, இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த தனது இராஜாங்க அமைச்சர் பதவியை இராஜினாமா செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

 

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
death body 1
இலங்கை

மெகசின் சிறைச்சாலையில் உயிரிழந்தவர் தொடர்பில் வெளியான அதிர்ச்சித்தகவல்கள்.

நேற்றைய தினம் இரவு, கொழும்பு புதிய மெகசின் சிறைச்சாலையில் ஏற்பட்ட அமைதியின்மையின் போது உயிரிழந்த கைதி...

Chemmani Mass Graves
இலங்கை

தினந்தோறும் கிடைக்கப்பெறும் என்புக்கூடுகள் – அதிகரிக்கும் பதற்றம்.

100 நாட்களாக, செம்மணி மனித புதைகுழி அகழ்வு பணிகள் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில், இதுவரையில் 507...

dengue
இலங்கை

தென் மாகாணத்தில் அதிகம் பதிவாகும் டெங்கு நோயாளிகள்.

இந்த ஆண்டில் இதுவரை 88,522 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக, தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது....

parlimen president 1
இலங்கை

சிறைச்சாலைகள் மற்றும் கைதிகள் தொடர்பில் இடம்பெற்ற விசேட கலந்துரையாடல்.

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையில் இன்று பிற்பகல் ஜனாதிபதி செயலகத்தில், சிறைச்சாலைகளில் நிலவும் நிலைமை...