New Project 44
செய்திகள்இலங்கை

அச்சுறுத்தப்பட்ட அரசியல் கைதிகள்! – நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு

Share

இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்தவினால் துப்பாக்கி முனையில் அச்சுறுத்தலுக்குள்ளான 08 சிறைக்கைதிகளுக்கு உரிய பாதுகாப்பை வழங்குமாறு உயர் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.

இதற்கமைய, குறித்த அரசியல் கைதிகளுக்கு உடனடி பாதுகாப்பை வழங்குமாறு சிறைச்சாலைகள் ஆணையாளா் நாயகத்துக்கு சட்டமா அதிபர் அறிவித்துள்ளாா்.

கடந்த சில தினங்களுக்கு முன்னர் அநுராதபுரம் சிறையில் தமிழ் அரசியல் கைதிகளை இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த துப்பாக்கி முனையில் அச்சுறுத்திய சம்பவம் பெரும் பரப்பரப்பை ஏற்படுத்தியிருந்தது.

இதனை, தொடர்ந்து இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்தவை கைது செய்யுமாறு கோரி குற்ற விசாரணை பிரிவில் சிறை கைதிகளை பாதுகாக்கும் குழு முறைப்பாடு செய்துள்ளது.

லொஹான் ரத்வத்த மீது குற்றவியல் சட்டம் செயற்படுத்தப்பட்டு அவரை கைது செய்து நீதிமன்றில் ஆஜர் செய்ய வேண்டும் என கைதிகள் பாதுகாப்பு குழு குறிப்பிட்டிருந்தது.

இதற்கமைய, இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த தனது இராஜாங்க அமைச்சர் பதவியை இராஜினாமா செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

 

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
Murder Recovered Recovered Recovered 19
இலங்கைசெய்திகள்

கஹவத்தையில் கடும் பதற்றம்! பொதுமக்கள் மீது கண்ணீர் புகைத் தாக்குதல் நடத்தும் பொலிஸார்

கஹவத்தையில் பொலிஸார் மற்றும் பொதுமக்களுக்கு இடையில் ஏற்பட்ட குழப்பநிலை காரணமாக அங்கு கடும் பதற்றமான சூழல்...

Murder Recovered Recovered Recovered 17
இலங்கைசெய்திகள்

எமக்கு தொடர்பில்லை! செம்மணி அவலத்தில் இருந்து பொறுப்பு துறக்கும் அமைச்சர்

செம்மணி புதைகுழி சம்பவங்களுக்கும் தனது கட்சிக்கும் எவ்வித தொடர்பும் இல்லை என கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம்...

9
சினிமாசெய்திகள்

பிக்பாஸ் புகழ் ஷாரிக்கிற்கு குழந்தை பிறந்தது.. அவரே வெளியிட்ட குழந்தையின் வீடியோ

தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வந்தவர்கள் உமா ரியாஸ் மற்றும் ரியாஸ் கான் ஜோடி....

8
சினிமாசெய்திகள்

சிவகார்த்திகேயனுடன் மோதும் முன்னணி நடிகர்.. பிரம்மாண்டமாக ஒரே நாளில் வெளியாகும் இரண்டு படங்கள்

ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் திரைப்படம் மதராஸி. இப்படத்தில் சிவகார்த்திகேயனுடன்...