mahindananda aluthgamage
செய்திகள்இலங்கை

மஹிந்தானந்த தலை குறிவைப்பு!

Share

விவசாயத்துறை அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகேவுக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணையொன்றை கொண்டுவருவதற்கு ஐக்கிய மக்கள் சக்திக்குள் கலந்துரையாடல் இடம்பெற்றுவருவதாக அரசியல் வட்டாரங்களில் இருந்து அறியமுடிகின்றது.

உரிய முகாமைத்துவ பொறிமுறையின்றி – மாற்று ஏற்பாடுகள் இன்றி அவசரமாக இரசாயன உரத்துக்கு தடை விதித்தமை, இதனால் விவசாயிகளுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்பு, பெருந்தோட்டத்துறையில் ஏற்பட்டுள்ள வீழ்ச்சி உட்பட மேலும் பல விடயங்களை மையப்படுத்தியே இப் பிரேரணையை கொண்டுவருவதற்கு ஏற்பாடு இடம்பெற்று வருகின்றது.

நம்பிக்கையில்லாப்பிரேரணையை தோற்கடிப்பதற்கான பலம் அரசாங்கம் வசம் இருந்தாலும், விவசாயிகளின் பிரச்சினைகளை பட்டியலிட்டு காட்டும் நகர்வாகவே இப் பிரேரணை முன்வைக்கப்படும் என தெரியவருகின்றது.

வரவு – செலவுத் திட்ட கூட்டத்தொடர் ஆரம்பமாவதால், பிரேரணை கொண்டுவந்தால்கூட அதனை ஜனவரி மாதமளவிலேயே விவாதத்துக்கு எடுப்பதற்கு அரசாங்கம் உடன்படக்கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
Suresh Salley
இலங்கை

மீண்டும் விசாரணைக்கு வந்த சுரேஷ் சலே வழக்கு.

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகளுக்காக , பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது...

body
இலங்கை

இரத்தினபுரியில் மீட்கப்பட்ட இளம்பெண்ணின் சடலம்!

  இரத்தினபுரி , கொடிகமுவவில் பகுதியில் தனியாக வசித்து வந்த 32 வயதான கமகே நிசான்ச...

ordinary
இலங்கை

வரலாற்று சாதனை படைத்த இலங்கை மருத்துவர்கள்!

  கண்டி, பேராதனை போதனா வைத்தியசாலையில் வரலாற்றுச் சாதனை படைக்கப்பட்டுள்ளது. இடுப்புப் பகுதியில் இணைந்திருந்த இரட்டையர்களை...

veppam 1
இலங்கை

வடக்கு கிழக்கிற்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை.

மனித உடலால் உணரப்படும் வெப்பத்தின் அளவான ‘வெப்பக் குறியீடு’, இன்று பகல் வேளையில் குறிப்பிட்ட சில...