VideoCapture 20220206 155130
செய்திகள்இலங்கைபிராந்தியம்

சேதன பசளை உற்பத்திக்கு புதிய கட்ட்டம் – கல்லுண்டாய் வெளியில் அடிக்கல் நாட்டு நிகழ்வு

Share

யாழ்ப்பாணம் – கல்லுண்டாய் வெளியில் திண்மக்கழிவுகளை கொண்டு சேதன பசளை உற்பத்தி செய்வதற்கான புதிய கட்டிடத்திற்கு அடிக்கல் நாட்டு நிகழ்வு இன்றையதினம் இடம்பெற்றது.

வலிகாமம் தென்மேற்கு பிரதேச சபைக்குட்பட்ட கல்லூண்டாய் வெளியில் திண்மகழிவுகளை அகற்ற பிரதேச சபைக்கு வழங்கப்பெற்ற10ஏக்கர் நிலப்பரப்பில் 4 ஏக்கர் நிலப்பரப்பில் திண்மக்கழிவு முகாமைத்துவம் செய்து சேதன பசளை உற்பத்தி நிலையத்தின் அமைக்கப்படவுள்ளது.

குறித்த பிரதேச சபையால் ஏற்கனவே கல்லூண்டாய் தரிசு நிலத்தில் மண் நிரப்பப்பட்டு சேதன பசளை உருவாக்குவதற்கான நிலையம் அமைக்கப்பெற்று வடமாகாணத்தில் குறித்த சேதன பசளை நிலையம் முண்ணணி வகித்து வரும் நிலையில் இன்று மேலுமொரு நிலையத்திற்கு ஒரு கோடியே இருபத்தைந்து லட்சம் ரூபா நிதி ஒதுக்கீட்டில் இத்திண்மக் கழிவுகளை தரம்பிரிக்கும் கட்டிடத்திற்கான அடிக்கல் நாட்டப்பட்டது.

இதனையடுத்து ஏற்கனவே அமைக்கப்பெற்ற சேதன பசளை நிலையத்தில் உற்பத்தி செய்யப்பட்ட சேதன பசளைகளும் இயந்திர தொகுதிகளும் பிரதேச சபையின் தவிசாளர் அ.ஜெபநேசனால் விருந்தினர்களுக்கு காண்பிக்கப்பட்டது.

இந்த நிகழ்வில் வடக்கு மாகாண விவசாய பணிப்பாளர் எஸ்.சிவகுமார், சண்டிலிப்பாய் பிரதேச செயலாளர் யசோதா உதயகுமார், சண்டிலிப்பாய் கமநல பெரும்போக உத்தியோகத்தர், பொது சுகாதார பரிசோதகர்கள், கிராம அலுவலர், பிரதேச சபையின் செயலாளர், சபையின் உத்தியோகத்தர்கள், ஊழியர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

VideoCapture 20220206 155124 VideoCapture 20220206 155130VideoCapture 20220206 155301 VideoCapture 20220206 155243 VideoCapture 20220206 155257 VideoCapture 20220206 155219

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
Untitled 24
செய்திகள்உலகம்

ஈரான் போர் நிறுத்தம் கோருகிறது: ஹோர்முஸ் ஜலசந்தி திறக்கப்படும் வரை தாக்குதல் தொடரும் என டிரம்ப் எச்சரிக்கை!

ஈரானின் புதிய தலைமை (New Regime) அமெரிக்காவிடம் போர் நிறுத்தம் கோரியுள்ளதாக அமெரிக்க அதிபர் டொனால்ட்...

Untitled 23
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாளை நாடு தழுவிய அளவில் மருத்துவர்கள் வேலைநிறுத்தம்: 24 மணி நேரப் போராட்டத்திற்கு GMOA அழைப்பு!

நாட்டிலுள்ள அனைத்து அரச மருத்துவமனைகளையும் தழுவிய ரீதியில் நாளை (ஏப்ரல் 02, 2026) வியாழக்கிழமை காலை...

Untitled 22
செய்திகள்இந்தியா

மத்திய கிழக்கு போர் எதிரொலி: இந்தியாவில் ஏடிஎஃப் மற்றும் வர்த்தக எரிவாயு விலைகள் உயர்வு!

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவி வரும் போர் பதற்றம் காரணமாக உலகளாவிய எரிசக்தி செலவுகள் அதிகரித்துள்ள...

Untitled 21
செய்திகள்உலகம்

வானில் இன்று தோன்றும் ‘இளஞ்சிவப்பு நிலவு’: 50 ஆண்டுகளுக்குப் பின் நிலவுக்கான மனிதப் பயணம் தொடக்கம்!

புதிய வசந்த காலத்தின் வருகையை அறிவிக்கும் வகையில், ஏப்ரல் மாதத்தின் முதல் முழு நிலவான ‘இளஞ்சிவப்பு...