VideoCapture 20220206 155130
செய்திகள்இலங்கைபிராந்தியம்

சேதன பசளை உற்பத்திக்கு புதிய கட்ட்டம் – கல்லுண்டாய் வெளியில் அடிக்கல் நாட்டு நிகழ்வு

Share

யாழ்ப்பாணம் – கல்லுண்டாய் வெளியில் திண்மக்கழிவுகளை கொண்டு சேதன பசளை உற்பத்தி செய்வதற்கான புதிய கட்டிடத்திற்கு அடிக்கல் நாட்டு நிகழ்வு இன்றையதினம் இடம்பெற்றது.

வலிகாமம் தென்மேற்கு பிரதேச சபைக்குட்பட்ட கல்லூண்டாய் வெளியில் திண்மகழிவுகளை அகற்ற பிரதேச சபைக்கு வழங்கப்பெற்ற10ஏக்கர் நிலப்பரப்பில் 4 ஏக்கர் நிலப்பரப்பில் திண்மக்கழிவு முகாமைத்துவம் செய்து சேதன பசளை உற்பத்தி நிலையத்தின் அமைக்கப்படவுள்ளது.

குறித்த பிரதேச சபையால் ஏற்கனவே கல்லூண்டாய் தரிசு நிலத்தில் மண் நிரப்பப்பட்டு சேதன பசளை உருவாக்குவதற்கான நிலையம் அமைக்கப்பெற்று வடமாகாணத்தில் குறித்த சேதன பசளை நிலையம் முண்ணணி வகித்து வரும் நிலையில் இன்று மேலுமொரு நிலையத்திற்கு ஒரு கோடியே இருபத்தைந்து லட்சம் ரூபா நிதி ஒதுக்கீட்டில் இத்திண்மக் கழிவுகளை தரம்பிரிக்கும் கட்டிடத்திற்கான அடிக்கல் நாட்டப்பட்டது.

இதனையடுத்து ஏற்கனவே அமைக்கப்பெற்ற சேதன பசளை நிலையத்தில் உற்பத்தி செய்யப்பட்ட சேதன பசளைகளும் இயந்திர தொகுதிகளும் பிரதேச சபையின் தவிசாளர் அ.ஜெபநேசனால் விருந்தினர்களுக்கு காண்பிக்கப்பட்டது.

இந்த நிகழ்வில் வடக்கு மாகாண விவசாய பணிப்பாளர் எஸ்.சிவகுமார், சண்டிலிப்பாய் பிரதேச செயலாளர் யசோதா உதயகுமார், சண்டிலிப்பாய் கமநல பெரும்போக உத்தியோகத்தர், பொது சுகாதார பரிசோதகர்கள், கிராம அலுவலர், பிரதேச சபையின் செயலாளர், சபையின் உத்தியோகத்தர்கள், ஊழியர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

VideoCapture 20220206 155124 VideoCapture 20220206 155130VideoCapture 20220206 155301 VideoCapture 20220206 155243 VideoCapture 20220206 155257 VideoCapture 20220206 155219

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
articles2FeEKtDKWyXj0ebdxP7pcx
செய்திகள்உலகம்

வரலாற்று வெற்றி: அமெரிக்காவிடமிருந்து மீட்கப்படும் 3 பழைமைவாய்ந்த சோழர் காலச் சிலைகள்!

தமிழகத்தின் பல்வேறு ஆலயங்களில் இருந்து திருடப்பட்டு அமெரிக்காவிற்குக் கடத்தப்பட்ட மிகவும் பழைமைவாய்ந்த மூன்று சோழர் காலச்...

image 3a35841713
செய்திகள்இலங்கை

இலங்கையின் சுகாதாரத் துறையில் புதிய திருப்பம்: அனைத்துத் தொழிற்சங்கங்களும் ஒரே குழுவாக ஒன்றிணைந்து செயற்பட இணக்கம்!

அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் நிறைவேற்று சபைக்கும் அனைத்து சுகாதார தொழிற்சங்கங்களுக்கும் இடையிலான கலந்துரையாடல் ஒன்று...

rajith
செய்திகள்இலங்கை

ராஜித சேனாரத்ன மீதான ஊழல் வழக்கு: விசாரணையின் முன்னேற்ற அறிக்கையைச் சமர்ப்பிக்க நீதிமன்றம் உத்தரவு!

மீன்பிடித் துறைமுக மணல் அகழ்வுத் திட்டத்தில் அரசாங்கத்திற்குப் பாரிய நட்டத்தை ஏற்படுத்தியதாகக் கூறப்படும் ஊழல் வழக்குத்...

images 1 8
செய்திகள்இலங்கை

சதொச வெள்ளைப்பூண்டு மோசடி: முன்னாள் விநியோக முகாமையாளர் உட்பட 3 பேர் கைது – பிணையில் விடுதலை!

2021 ஆம் ஆண்டு லங்கா சதொச நிறுவனத்தின் வெள்ளைப்பூண்டு கையிருப்பினை விற்பனை செய்ததில் அரசாங்கத்திற்கு 17...