images 1 5
செய்திகள்உலகம்

போர் நிறுத்தம் பின்னணியிலும் நெருக்கடி: கனடா, பிரான்ஸ் உட்பட பல நாடுகளும் நெதன்யாகுவை கைது செய்ய தயார்!

Share

இஸ்ரேல் – காசா போரில் அமெரிக்காவின் தலையீட்டால் தற்போது அமைதி ஒப்பந்தம் (போர் நிறுத்தம்) ஏற்படுத்தப்பட்டுள்ள நிலையிலும், இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு கால் வைத்தால் கைது செய்யப்படுவார் எனப் பல நாடுகள் அறிவித்துள்ளது இஸ்ரேலுக்குப் பெரும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.

இஸ்ரேல் – ஹமாஸ் இடையேயான போரில் காசாவைத் தாக்கத் தொடங்கிய இஸ்ரேல், 67 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாலஸ்தீன மக்களைக் கொன்று குவித்தது. இது இனப்படுகொலை எனப் பல நாடுகளும் கண்டித்தன. இதன் விளைவாக, நெதர்லாந்து சர்வதேச நீதிமன்றத்தில் தொடுக்கப்பட்ட வழக்கில் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவிற்குப் பிடியாணை (Arrest Warrant) பிறப்பிக்கப்பட்டது.

தற்போது போர் நிறுத்தம் நடைமுறையாகியுள்ள நிலையிலும், நெதன்யாகு மீதான பிடியாணை நடைமுறையில் உள்ளது.

இதனால், பெஞ்சமின் நெதன்யாகு கனடாவிற்குள் நுழைந்தால் அவரைக் கைது செய்வோம் என கனடா பிரதமர் மார்க் கார்னி ஏற்கனவே எச்சரித்திருந்தார்.

இந்நிலையில், பிரான்ஸ், துருக்கி, பெல்ஜியம் உள்ளிட்ட நாடுகளும் பெஞ்சமின் நெதன்யாகு மீதான சர்வதேச பிடியாணையைச் செயல்படுத்துவோம் எனக் கூறியுள்ளதால் சர்வதேச அளவில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Share
தொடர்புடையது
water cut
உலகம்

பிரித்தானியாவில் வறட்சியை தடுப்பதற்கு பிரித்தானியாவில் புதிய தண்ணீர் கட்டுப்பாடுகள்.

  பிரித்தானியாவின் பல பகுதிகள் வெப்ப அலை காரணமாக வெப்ப சாதனைகளை படைத்துள்ளன. 1976 மற்றும்...

Drug
உலகம்உலகம்

பதின் பருவத்தை கடந்த இளையவர்களை அதிகம் காவு வாங்கும் போதைப்பொருள் – ஜேர்மனியில் அதிர்ச்சி.

  போதைப்பொருட்களால் பலியாகும் இளைஞர்களின் எண்ணிக்கை அதிகரித்துவரும் விடயம் ஜேர்மனியில் அதிர்ச்சியை உருவாக்கியுள்ளது. அண்மையில், தலைநகர்...

gold 2
வணிகம்இலங்கைஉலகம்

இன்றைய தினத்திலும் தங்கத்தின் விலையில் சரிவு!

தங்கம் மற்றும் வெள்ளியின் விலையானது இன்றும் குறிப்பிடத்தக்க வீழ்ச்சியினை பதிவு செய்துள்ளது. சர்வதேச சந்தையில் ஏற்பட்டுள்ள...

fake doctor
உலகம்

15 மரணங்களுக்கும் நானே காரணம் – அதிர வைக்கும் போலி மருத்துவரின் பின்னணி!

ஜெர்மனியைச் சேர்ந்த நோய்த்தணிப்பு சிகிச்சை மருத்துவர் ஒருவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. தனது 15 நோயாளிகளின்...