IMG 20211101 WA0019
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நியமனத்தில் புறக்கணிப்பு: போராட்டத்தில் சுகாதாரத் தொண்டர்கள்!!

Share

வடக்கு மாகாண ஆளுநர் செயலகத்திற்கு முன்பாக நியமனத்தில் புறக்கணிக்கப்பட்ட வடக்கு மாகாண சுகாதாரத் தொண்டர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

வடக்கு மாகாணத்தில் 970 சுகாதாரத் தொண்டர்கள் நீண்டநாட்களாகப் பணியாற்றியிருந்த நிலையில், அதில் 349 பேருக்கு அவர்களது சேவை கால அடிப்படையில் அரச நியமனத்துக்கான நியமனக் கடிதங்கள் வழங்கி வைக்கப்பட்டது.

அதில் ஏனையோரிற்கு நியமனம் வழங்கப்படாத நிலையில், தமக்கும் குறித்த நியமனத்தை வழங்குமாறு கோரி, வடக்கு மாகாண ஆளுநர் செயலகம் முன்றலில் இன்று போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

நீண்ட காலமாக தொண்டு அடிப்படையில் சுகாதாரத் தொண்டர்களாக கடமையாற்றியிருக்கிறோம் எனவும், மொத்தமாக 970 பேர் வடக்கு மாகாணத்தில் உள்ளோம்.

ஆனால் 349 பேருக்கு மாத்திரமே நிரந்தர நியமனக் கடிதங்கள் வழங்கி வைக்கப்பட்டு, தற்போது அவர்களுக்குரிய நியமனம் நிறுத்திவைக்கப்பட்டுள்ளது எனவும் அவர்கள் மேலும் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை 970 சுகாதாரத் தொண்டர்களுக்கும் நிரந்தர நியமனம் வழங்குவதற்கு தற்போதைய, புதிய ஆளுநர் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரி இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.

#SrilankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
32 5
இலங்கைசெய்திகள்

தேசிய மக்கள் சக்தியினை விட்டு வெளியேறுவதாக யாழ். உறுப்பினர் பகிரங்க அறிவிப்பு

யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த, தேசிய மக்கள் சக்தியின் அடிப்படை உறுப்பினர் ஒருவர் தனது பதவியில் இருந்து விலகுவதாக...

31 5
இலங்கைசெய்திகள்

இலங்கை ரூபாவின் பெறுமதியில் ஏற்பட்டுள்ள மாற்றம்

இலங்கை மத்திய வங்கி இன்றைய நாளுக்கான (16) நாணயமாற்று விகிதங்களை வெளியிட்டுள்ளது. இதன்படி, அமெரிக்க டொலரின்...

6 19
இலங்கைசெய்திகள்

முற்றாக முடங்கி போன உப்பு உற்பத்தி

2025ஆம் ஆண்டின் இதுவரையான காலப்பகுதிக்குள் உப்பு உற்பத்தி முற்றாக முடங்கிப் போயுள்ளதாக உப்புக்கூட்டுத்தாபன தலைவர் நந்தனதிலக...

19 12
இலங்கைசெய்திகள்

உப்பு இறக்குமதிக்கு அமைச்சரவையின் விசேட அனுமதி

நாட்டில் நிலவும் உப்புத்தட்டுப்பாட்டை நீக்கும் வகையில் உப்பு இறக்குமதிக்கான விசேட அனுமதியொன்றை அமைச்சரவை வழங்கியுள்ளது. அதன்...