IMG 20211101 WA0019
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நியமனத்தில் புறக்கணிப்பு: போராட்டத்தில் சுகாதாரத் தொண்டர்கள்!!

Share

வடக்கு மாகாண ஆளுநர் செயலகத்திற்கு முன்பாக நியமனத்தில் புறக்கணிக்கப்பட்ட வடக்கு மாகாண சுகாதாரத் தொண்டர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

வடக்கு மாகாணத்தில் 970 சுகாதாரத் தொண்டர்கள் நீண்டநாட்களாகப் பணியாற்றியிருந்த நிலையில், அதில் 349 பேருக்கு அவர்களது சேவை கால அடிப்படையில் அரச நியமனத்துக்கான நியமனக் கடிதங்கள் வழங்கி வைக்கப்பட்டது.

அதில் ஏனையோரிற்கு நியமனம் வழங்கப்படாத நிலையில், தமக்கும் குறித்த நியமனத்தை வழங்குமாறு கோரி, வடக்கு மாகாண ஆளுநர் செயலகம் முன்றலில் இன்று போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

நீண்ட காலமாக தொண்டு அடிப்படையில் சுகாதாரத் தொண்டர்களாக கடமையாற்றியிருக்கிறோம் எனவும், மொத்தமாக 970 பேர் வடக்கு மாகாணத்தில் உள்ளோம்.

ஆனால் 349 பேருக்கு மாத்திரமே நிரந்தர நியமனக் கடிதங்கள் வழங்கி வைக்கப்பட்டு, தற்போது அவர்களுக்குரிய நியமனம் நிறுத்திவைக்கப்பட்டுள்ளது எனவும் அவர்கள் மேலும் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை 970 சுகாதாரத் தொண்டர்களுக்கும் நிரந்தர நியமனம் வழங்குவதற்கு தற்போதைய, புதிய ஆளுநர் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரி இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.

#SrilankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
images 6 6
செய்திகள்அரசியல்இலங்கை

உறவுகளுக்கு என்ன நேர்ந்தது என்பதை அறியும் உரிமை தமிழர்களுக்கு உண்டு: காணாமல் போனோர் விவகாரத்தில் அமைச்சர் ஹர்ஷன அதிரடி!

காணாமல் போனோர் விவகாரத்தில் எவரையும் பாதுகாக்க வேண்டிய அவசியம் அரசாங்கத்திற்கு கிடையாது என்றும், பாதிக்கப்பட்ட மக்களுக்கு...

Austrian accident 2
செய்திகள்இலங்கைபிராந்தியம்

தெற்கு அதிவேக வீதியில் கார் கவிழ்ந்து விபத்து: வத்தளையைச் சேர்ந்த பெண் பலி! இருவர் படுகாயம்!

தெற்கு அதிவேக வீதியில் நேற்று (24) மாலை இடம்பெற்ற பாரிய வீதி விபத்தில் பெண் ஒருவர்...

MediaFile 4 3
செய்திகள்உலகம்

சீனாவுடன் கைக்கோர்த்தால் 100% வரி: கனடாவுக்கு ட்ரம்ப் விடுத்துள்ள கடும் எச்சரிக்கை!

கனடா மற்றும் சீனா இடையிலான புதிய வர்த்தக உறவுகள் காரணமாக, அமெரிக்காவிற்கும் கனடாவிற்கும் இடையிலான உறவில்...

MediaFile 3 4
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நுவரெலியாவில் உறைபனி மற்றும் குளு குளு காலநிலை: விடுமுறை தினத்தில் அலைமோதும் சுற்றுலா பயணிகள்!

மலையகத்தின் வசந்தபுரி என அழைக்கப்படும் நுவரெலியாவில் தற்போது நிலவி வரும் மாறுபட்ட மற்றும் இதமான காலநிலை...